அமித் ஷா மீது பதாகை வீசியவர் கைது

இன்று சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விமான நிலையத்திலிருந்து ஹோட்டலுக்கு காரில் சென்று கொண்டிருக்கையில் திடீரென காரை நிறுத்தி ரோட்டில் நடந்து வந்தார். ரோட்டின் இருபுறமும் நின்று கொண்டிருந்த தொண்டர்களைப் பார்த்து கையை அசைத்தபடி அவர் வந்து கொண்டிருந்தார்.அப்போது பார்வையாளர்கள் பகுதியில் நின்று கொண்டிருந்த ஒருவர் அவர் மீது ஒரு பதாகையை வீசினார்.

இதையடுத்து பாதுகாப்புக்கு அங்கிருந்த போலீசார் அந்த நபரைப் பிடித்தனர். முதலில் அவர் மனநலம் சரி இல்லாதவர் அதனால்தான் இப்படிச் செய்து விட்டார் என்று ஒரு தகவல் பரவியது பின்னர் போலீசார் மேற்கொண்ட விசாரணையில்அவர் பெயா் துரைராஜ் (62) என்றும் சென்னை நங்கநல்லூரை சோ்ந்தவா் என்பதும் தெரியவந்தது.

கடந்த இரு மாதங்களுக்கு முன்பு நங்கநல்லூரில் சுவா் விளம்பரம் செய்வதில் திமுக மற்றும் பாஜகவினருடையை இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து மறுநாள் பாஜகவினர் சென்னை நங்கநல்லூரில் திமுகவை கண்டித்து ஆா்ப்பாட்டம் நடத்தினா். அந்த ஆா்ப்பாட்டத்தில் இடையே புகுந்து,பிரதமா் மோடி அறிவித்த ரூ.15 லட்சம் பணம் எங்கே? என்று கோஷமிட்டவா் தான் இந்த துரைராஜ். இதனால் கோபமடைந்த பாஜக தொண்டர்கள் அவரை அடித்து உதைத்து அனுப்பினர். பழவந்தாங்கல் போலீசாா் அவரை மீட்டு எச்சரித்து அனுப்பி வைத்தனா்.

அதே துரைராஜ் தான் இப்போது மீண்டும் சிக்கியுள்ளதால்,இம்முறை போலீசாா் கைது செய்து நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனா்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
remdesivir-sold-for-rs-1-8-crore-in-chennai-kelambakkam-center
உயிரை காக்க சென்னை கீழ்பாக்கத்தில் குவியும் மக்கள்! ஐந்தே நாட்களில் ரூ.1.88 கோடி!
17-year-old-girl-was-raped-by-many-for-2-years-like-pollachi-sexual-harassment-case
2 ஆண்டுகளாக சிறுமியை கற்பழித்த 3 பேர்… தாம்பரத்தில் நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…
corona-virus-150-districts-across-india-might-met-full-lockdown
சென்னை உட்பட நாடு முழுவதும் 150 மாவட்டங்களில் முழு ஊரடங்கு?
non-loan-insurance-company-employe-abduction-police-looking-for-kidnappers
லோன் கொடுக்க மறுத்த இன்சூரன்ஸ் கம்பெனி ஊழியர் கடத்தல்
night-curfew-lasts-for-2-days-deserted-chennai
2 வது நாள் இரவு ஊரடங்கு - வெறிச்சோடிய சென்னை
all-chennai-local-train-service-after-10pm-cancelled
சென்னையில் மின்சார ரயில் இரவு 10 மணிக்கு மேல் ரத்து
a-girl-molested-by-church-paster-in-chennai
ஜெபம் செய்ய வந்த பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த மதபோதகர்.. அதிர்ச்சியில் பக்தர்கள்!
Tag Clouds

READ MORE ABOUT :