பிரபல தெலுங்கு இயக்குநரின் மகன் படத்தில் நாயகியாகிய டிடி

Dhivya dharshini becomes heroin

by Sakthi, Mar 25, 2019, 21:46 PM IST

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலமாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஆங்கர் திவ்ய தர்ஷினி என்ற டிடி. தற்போது தமிழ் ஆங்கர்களில் முன்னணியில் இருப்பவர். கலகல பேச்சும், டைமிங் கமெண்டுகளும் இவரின் ப்ளஸ்.

டிடி

விஜய் தொலைக்காட்சி மூலமாகதான் இவர் அனைவராலும் டிடி என்று அறியப்பட்டார்.  கிட்ட தட்ட 20 வருஷங்களாக டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.  சில தமிழ் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். தற்போது தெலுங்கு படத்தில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார்,

அனில் பதூரி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்துக்கு ‘ரொமாண்டிக்’என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகன்னாத்தின் மகன்  நடிகர் ஆகாஷ் பூரி ஹீரோவாக நடித்து வருகிறார்.  இந்த படத்தில் நடிகை சார்மி கவுரும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார், பிரபல டோலிவுட் டைரக்டர் பூரி ஜெகன்னாத் தயாரித்து வரும் இந்த படத்துக்கான ஃபர்ஸ்ட் ஷெட்டியூல் ஷூட்டிங் முடிந்துவிட்டது. இந்த தகவலை டிடி ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். தமிழ் ரசிகர்களை தொடர்ந்து தெலுங்கு ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்க்க தயாராகிவிட்டார் டிடி!

You'r reading பிரபல தெலுங்கு இயக்குநரின் மகன் படத்தில் நாயகியாகிய டிடி Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை