பட வாய்ப்பு குறைந்ததால் சீரியலுக்கு தாவிய பிரபல நடிகர்..
தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக வலம் வந்த நடிகர் ஆர்யாவின் மார்க்கெட் டல் ஆனதால் தற்போது சீரியலுக்கு தாவியுள்ளார்.
நடிகர் ஆர்யா உள்ளம் கேட்குமே, அறிந்தும் அறியாமலும், பட்டியல் உள்ளிட்ட படங்கள் மூலம் தனது நடிப்பு திறமையை காட்டினார். இரண்டு ஹீரோக்கள் நடிக்கும் படங்களில் நடித்து வந்த ஆர்யா பின்னர், நான் கடவுள், மதராசபட்டினம் உள்ளிட்ட சிங்கிள் ஹீரோவாக நடித்து வெற்றிப் படங்களை குவித்தார். தொடர்ந்து, பாஸ் என்கிற பாஸ்கரன், ஓரம் போ, வேட்டை உள்ளிட்ட படங்கள் சொல்லும் அளவிற்கு ஆர்யாவிற்கு கைக்கொடுக்கவில்லை.
அடுத்தடுத்து தோல்வியைத் தழுவிய படங்களால் ஆர்யா நஷ்டம் அடைந்ததோடு, பட வாய்ப்புகளும் குறையத் தொடங்கின. தற்போது, கஜினிகாந்த் என்ற படத்தில் ஆர்யா நடித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தன்னை திருமணம் செய்து கொள்ள ஆர்வமுள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம் என வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதற்கு பல பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வந்தன. இதில், தேர்வு செய்த 16 பெண்களை கொண்டு சீரியல் எடுக்கப்போவதாகவும், அதில் ஆர்யா நாயகனாக நடிக்கப்போவதாகவும் தகவல்கள் வெளியானது. இந்த சீரியல், கலர்ஸ் டிவியில் விரைவில் ஒளிபரப்பப்படும் எனவும் கூறப்படுகிறது.
பட வாய்ப்புகள் குறைந்ததால், ஆர்யா சீரியலில் நடிக்கும் முடிவை எடுத்திருக்கிறார் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
You'r reading பட வாய்ப்பு குறைந்ததால் சீரியலுக்கு தாவிய பிரபல நடிகர்.. Originally posted on The Subeditor Tamil
More Cinema News