முகமூடி அணிந்து காற்றுமாசு பற்றி அட்வைஸ் செய்த பிரியங்கா சோப்ரா... ரசிகர்கள் கண்டிப்பால் பரபரப்பு...
Delhi air pollution: Priyanka Chopra having a hard time shooting
தலைநகர் டெல்லியில் காற்று மாசு குறித்த பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா அட்வைஸ் செய்திருக்கிறார். அவர் நடிக்கும் தி ஒயிட் டைகர் படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடக்கிறது. அங்குள்ள காற்று மாசுவினால் படப்பிடிப்பு நடத்த முடியாமல் தடங்கள் ஏற்பட்டிருக்கிறது.
இதுகுறித்து பிரியங்கா சோப்ரா முகத்தில் மாஸ்க் (முகமூடி) அணிந்த தோற்றத்துடன் அட்வைஸ் செய்திருக்கிறார் ,'காற்றுமாசு நிரம்பி உள்ள டெல்லியில் தி ஒயிட் டைகர் படப்பிடிப்பு நடத்துவது கடினமாக உள்ளது. இத்தகைய சூழலில் தலைநகரில் மக்கள் வாழ முடியாத நிலை உள்ளது. நமக்கெல்லாம் காற்றை சுத்தப்படுத்தும் ஏர்பியூரியர்ஸ், மாஸ்க் கிடைக்கிறது. ஆனால் வீடே இல்லாதவர்கள். மாஸ்க் கூட வாங்க முடியாதவர்களின் நிலை என்ன?' என கூறியிருக்கிறார்.
பிரியங்காவின் பதிவுக்கு ஒரு பக்கம் வரவேற்பு கிடைத்திருக்கிறது. மற்றொரு பக்கம் ரசிகர்கள் பலர் அவருக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் பிரியங்கா சோப்ரா குடும்பத்தினருடன் அமர்ந்து சிகரெட் புகைப்பதுபோன்ற படம் வெளியிட்டிருந்தார். அதை தற்போது குறிப்பிட்டு, முதலில் நீங்கள் சிகரெட் புகைப்பதை நிறுத்துங்கள் என கூறியிருக்கின்றனர்.
மேலும் ஏசி பயன்படுத்துவது, கார் பயன்பாடு போன்றவைகூட காற்று மாசுவுக்கு காரணம், அதையும் சரிசெய்துகொள்ளுங்கள் என தெரிவித்துள்ளனர்.
You'r reading முகமூடி அணிந்து காற்றுமாசு பற்றி அட்வைஸ் செய்த பிரியங்கா சோப்ரா... ரசிகர்கள் கண்டிப்பால் பரபரப்பு... Originally posted on The Subeditor Tamil
More Cinema News