கோயில் கோயிலாக சுற்றி வரும் நயன்தாரா.. திருமண வேண்டுதல் நிறைவேற பக்தி உலா..

Nayanthara Vignesh at Suchindram Thanumalayan temple!

by Chandru, Dec 17, 2019, 21:10 PM IST

நடிகை நயன்தாராவின் போக்கில் திடீர் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. கமர்ஷியல் படங்கள், கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்து வந்தவர் திடீரென்று குறுகிய காலத்தில் முடியக்கூடிய படங்களில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார்.

அஜீத்தின் வலிமை படத்தில் நடிக்க கேட்டபோதும் அதை உறுதி செய்யாத நயன்தாரா நடிகர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் மூக்குத்தி அம்மன் படத்தில் அம்மன் வேடம் ஏற்று நடிக்க ஒப்புக்கொண்டு படப்பிடிப்பிலும் பங்கேற்றிருக்கிறார்.

இதற்கிடையில் குடும்பத்தினர் நயன்தாராவின் திருமண விஷயத்தில் அழுத்தம் தரத் தொடங்கி உள்ளனர். காதலன் விக்னேஷ் சிவனை மணப்பதுபற்றி முடிவுவெடுத்து விரைவில் அறிவிக்கவும், உடனடியாக நிச்சயதார்த்துக்கு சம்மதம் தெரிவிக்கவும் கேட்டு வருகின்றனர்.

திருமண பேச்சு தொடங்கியதிலிருந்து நயன்தாரா கோயில் கோயிலாக சென்றுவருகிறார். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலுக்கு சென்றவர் பின்னர் திருச்செந்தூர் முருகன் கோயில், திருப்பதிக்கு வெங்கடாஜலபதி கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

இந்நிலையில் நேற்று நாகர்கோவில் சுசீந்திரம் கோயிலுக்குச் சென்று சிறப்பு பூஜையில் பங்கேற்று சாமி கும்பிட்டார். அவருடன் விக்னேஷ் சிவன் சென்றிருந்தார். திருமண விஷயம் தொடர்ந்து தாமதப்படுவதால் நல்லதொரு முடிவு ஏற்பட வேண்டும் என்று பிரார்த்தனையை முன்வைத்து நயன்தாரா இந்த ஆன்மிக தரிசன பயணத்தை மேற்கொண்டிருக்கிறாராம்.

You'r reading கோயில் கோயிலாக சுற்றி வரும் நயன்தாரா.. திருமண வேண்டுதல் நிறைவேற பக்தி உலா.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை