ஜோதிகாவின் அடுத்தப்பட அறிவிப்பை வெளியிட்டார் சூர்யா!
இரண்டாவது இன்னிங்க்ஸில் வெளுத்து வாங்கிக்கொண்டிருக்கும் ஜோதிகாவின் அடுத்தத் திரைப்படத்துக்கான அறிவிப்பை நடிகர் சூர்யா வெளியிட்டார்.
'நாச்சியார்' திரைப்படத்துக்குப் பின்னர் நடிகை ஜோதிகா தற்போது இயக்குநர் மணிரத்தினத்தின் 'செக்கச் சிவந்த வானம்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்தின் வேலைகள் நடந்துகொண்டிருக்கும் வேளையில் ஜோதிகாவுக்கானப் பகுதியை மணிரத்தினம் மார்ச் மாத இறுதியிலேயே முடித்துவிடுகிறாராம். இதையடுத்து இடைவேளையே இல்லாமல் ஜோதிகா தனது அடுத்தப் படத்துக்காகக் கமிட் ஆகியுள்ளார்.
இயக்குநர் ராதாமோகனின் இயக்கத்தின் தனது அடுத்தத் திரைப்ப்டத்தில் நடிக்க உள்ளார் ஜோதிகா. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் 'மொழி' திரைப்ப்டத்துக்குப் பின்னர் ராதாமோகன்- ஜோதிகா கூட்டணியில் இத்திரைப்படம் உருவாக உள்ளது.
இப்படத்துக்கானப் பெயர், இதர நட்சத்திரங்கள் குறித்த எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால், ஜோதிகாவின் இந்தத் திரைப்படம் ஹிந்தியில் வித்யா பாலன் நடிப்பில் வெளியான 'துமாரி சுளு' என்ற திரைப்ப்டத்தின் தலுவலாக அமையும் எனக் கூறப்படுகிறது.
You'r reading ஜோதிகாவின் அடுத்தப்பட அறிவிப்பை வெளியிட்டார் சூர்யா! Originally posted on The Subeditor Tamil
More Cinema News