ஆபாசமாக பேசியதாக தொழில் அதிபர் மீது அமலாபால் போட்ட வழக்கு.. ஐகோர்ட் புது உத்தரவு..

by Chandru, Feb 18, 2020, 16:36 PM IST

ஆடை படத்துக்கு பிறகு அதோ அந்த பறவை போல படத்தில் நடித்திருக்கிறார் அமலாபால். கடந்த சில வாரங்களுக்கு முன் தொழில் அதிபர் அழகேசன், பாஸ்கர் என 2 பேர் தன்னை ஆபாசமாக பேசியதாக சென்னை மாம்பலம் போலீசில் புகார் அளித்தார்.அதன்பேரில் அழகேசனை போலீசார் கைது செய்தனர். அத்துடன் தனியார் நிறுவன ஊழியர் பாஸ்கரன் என்பவரும் கைது செய்யப்பட்டார். பின்னர் இருவரும் ஜானில் வெளிவந்தனர். இதுதொடர்பான வழக்கு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

அமலாபால் தன் மீது பொய்யான புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் தொடந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கேட்டு பாஸ்கர் சென்னை ஐகோர்ட்டில் மனு செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி ராஜமாணிக்கம், அமலபால் புகாரின் பேரில் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தார். இதுதொடர்பாக போலீசார் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.

You'r reading ஆபாசமாக பேசியதாக தொழில் அதிபர் மீது அமலாபால் போட்ட வழக்கு.. ஐகோர்ட் புது உத்தரவு.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை