நயன் படத்திலிருந்து சமந்தா வெளியேறினாரா.. ஷூட்டிங் தொடங்கும் முன் பிரச்சினையா..?

by Chandru, Mar 6, 2020, 18:23 PM IST

விஜய் சேதுபதி, நயன்தாரா நடித்த நானும் ரவுடிதான் படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன் கூட்டணி மீண்டும் புதிய படத்தில் இணைகிறது. இப்படத்துக்கு காத்துவாக்குல ரெண்டு காதல் என பெயரிடப்பட்டது. சமீபத்தில் இப்படம்பற்றி விக்னேஷ் சிவன் அறிவித்தார். இதில் மற்றொரு ஹீரோயினாக சமந்தா நடிக்க ஒப்பந்தம் ஆனார்.

இரண்டு ஹீரோயின் கதையில் நடிக்க ஒப்புக்கொண்டது பற்றி சமந்தாவிடம் கேட்டபோது, 'விஜய்சேதுபதி, நயன்தாரா இரண்டு திறமையாளர்களுடன் நடிக்கும்போது அவர்களுடன் எனது நடிப்பையும் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ள முடியும். அதனாலேயே நடிக்க ஒப்புக் கொண்டேன் என்று கூறியிருந்ததுடன் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவும் காத்திருப்பதாகத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இப்படத்திலிருந்து சமந்தா விலகியிருப்ப தாக கோலிவுட்டில் பேச்சு எழுந்துள்ளது.
படப்பிடிப்பே தொடங்கவில்லை அதற்குள் என்ன ஆச்சி. சமந்தா ஏன் விலகுகிறார் என்று பலரும் கேட்டு வருகின்றனர். சமந்தா தற்போது கர்ப்பமாக இருப்பதால் படத்திலிருந்து விலகிய தாக கூறப்படுகிறது. ஆனால் தான் கர்ப்பமாக இருப்பதாக வோ, படத்திலிருந்து விலகியதாகவோ சமந்தா இதுவரை தெரிவிக்கவில்லை. சமந்தாவுக்கு நயன், விக்னேஷ்சிவன், விஜய்சேதுபதி படத்தில் இணைவது பிடித்திருப்பதுடன் தனது கதாபாத்திரம் மிகவும் அருமையாக இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார், அவர் இப்படத்திலிருந்து விலகுவதாக வரும் கிசுகிசுக்கள் உண்மை அல்ல என்றே தெரிகிறது.

You'r reading நயன் படத்திலிருந்து சமந்தா வெளியேறினாரா.. ஷூட்டிங் தொடங்கும் முன் பிரச்சினையா..? Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை