நடிகை- பாடகி பரவை முனியம்மா காலமானார் ..

Actor-Singer Paravai Muniyamma passes away

by Chandru, Mar 29, 2020, 10:22 AM IST

'சிங்கம்போல நடந்து வரான் செல்ல பேராண்டி..' பாடியவர்.

விக்ரம் நடித்த தூள் படத்தில், 'சிங்கம் போல நடந்து வரான் செல்ல பேராண்டி... என்ற பாடலை பாடி அதிரடி கிளப்பியவர் நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா. இவர் மதுரை மாவட்டம் பரவை என்று கிராமத்தைச் சேர்ந்தவர். அதனால் முனியம்மா என்ற அவரது பெயருடன் ஊர்ப் பெயரும் சேர்ந்து சொல்லப்பட்டுப் பிரபலமானார். காதல் சடுகுடு, ஏய், ஜெய் சூர்யா, கோவில் உள்ளிட்ட சுமார் 80க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இவர் கடந்த சில மாதங்களாகவே சிறுநீரக கோளாறு காரணமாகப் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.

சமீபத்தில் முனியம்மாவுக்கு உடல்நிலை மோசமானதையடுத்து மதுரை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு குணம் அடைந்தார். இதையடுத்து வீடு திரும்பினார். மீண்டும் அவருக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டது. நேற்று நள்ளிரவு 2.30 மணி அளவில் காலமானார். அவருக்கு வயது 83. கடைசியாகச் சென்ற 2014-ம் ஆண்டு வெளிவந்த சிவகார்த்திகேயனின் மான் கராத்தே படத்தில் கடைசியாக நடித்தார் பரவை முனியம்மா. அவர் தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவர்.

You'r reading நடிகை- பாடகி பரவை முனியம்மா காலமானார் .. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை