கொரோனா பாதித்தவருடன் விமானத்தில் வந்த நடிகர் மகன்.. தனி வீட்டில் தங்கவைக்கப்பட்டார்..

Suresh Gopis son in isolation

by Chandru, Mar 31, 2020, 10:50 AM IST

தமிழரசன், ஐ, சமஸ்தானம், தீனா, கற்பூர முல்லை போன்ற தமிழ் மற்றும் ஏராளமான மலையாள படங்களில் நடித்திருப்பவர் சுரேஷ் கோபி. இவர் பாஜ கட்சியைச் சேர்ந்தவர். ராஜ்யசபா நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார். தனது மகனைத் தனிமைப்படுத்தி வைத்திருக்கிறார் சுரேஷ் கோபி. என்ன காரணம்? எல்லாம் கொரோனா தொற்று செய்த சதிதான்.

இதுபற்றி சுரேஷ் கோபி கூறும்போது,'எனது இளைய மகன் லண்டனிலிருந்து வந்தார். அவர் பயணம் செய்த அதே விமானத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட ஒருவரும் வந்திருக்கிறார். ஆனால் என் மகனுக்கு கொரோனா அறிகுறி எதுவும் இல்லை. ஆனாலும் டாக்டர்கள் மற்றும் குடும்பத்தினர் அட்வைஸ் ஏற்றுத் தனியாக ஒரு வீட்டில் அவரை தங்க வைத்திருக்கிறேன். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்' என்றார்.

You'r reading கொரோனா பாதித்தவருடன் விமானத்தில் வந்த நடிகர் மகன்.. தனி வீட்டில் தங்கவைக்கப்பட்டார்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை