நடிகை ஷோபனா பேஸ்புக் ஹேக் செய்யப்பட்டது.. போலீசில் புகார்..

Shobanas Facebook account hacked, files police complaint

by Chandru, Apr 23, 2020, 09:08 AM IST

இது நம்ம ஆளு, தளபதி உள்ளிட்ட ஏராளமான தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்திருப்பவர் ஷோபனா. இவரது பேஸ்புக் இணையதள பக்கத்தை யாரோ ஹேக் செய்துள்ளனர். வெளிநாட்டிலிருந்து யாரோ சில வீடியோக்களை வெளியிட்டிருப்பதுடன், படங்களையும் பகிர்ந்திருக்கின்றனர். அதைக் கண்டு அதிர்ச்சி அடைத்த ஷோபனா போலீசில் புகார் அளித்திருக்கிறார்.


இது குறித்து ஷோபனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'எனது பேஸ் புக் கணக்கை யாரோ ஹேக் செய்திருக்கிறார்கள். இது பற்றி போலீசில் புகார் தரப்பட்டிருக்கிறது. ஹேக் செய்யப்பட்ட கணக்கை மீட்கும் முயற்சியை போலீசார் மேற்கொண்டுள்ளனர். முழுமையாக மீட்ட பிறகு மறுபடியும் அதில் எனது பதிவுகள் இடம்பெறும் 'எனத் தெரிவித்துள்ளார்.

You'r reading நடிகை ஷோபனா பேஸ்புக் ஹேக் செய்யப்பட்டது.. போலீசில் புகார்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை