“பிடர் கொண்ட சிங்கமே பேசு..” வைரமுத்துவின் கவிதையால் உற்சாகமடைந்த கருணாநிதி (வீடியோ)

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்த கவிஞர் வைரத்து “பிடர் கொண்ட சிங்கமே பேசு..” என்று தனது கவிதையை அவரிடம் வாசித்து மனம் உருக செய்த காட்சி கணத்தை ஏற்படுத்தியது.

தி.மு.க தலைவர் கருணாநிதி வயது முதர்வு காரணமாக தனது கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வு எடுத்து வருகிறார். சில சமயங்களில் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுவதால் கழுத்தில் டியூப் போடப்பட்டிருக்கிறது. கருணாநிதியிடம் நல்ல முன்னேற்றம் இருப்பதால், விரைவில் அந்த டியூப் எடுத்துவிடப்படும் எனவும் கூறப்பட்டது.

அவர் கடந்துவந்த பாதையை நினைவூட்டும் வகையில் அவ்வப்போது அண்ணா அறிவாலயம், முரசொலி அலுவலகம், மகள் கனிமொழி எம்.பி.,யின் வீட்டிற்கு கருணாநிதியை அழைத்து சென்றனர். இதைதவிர,  அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள், திரையுலகை சேர்ந்தவர்களும் அவரை சந்தித்து செல்கின்றனர்.

இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதியை கவிஞர் வைரமுத்து சந்தித்து கவிதை வாசித்த வீடியோ நேற்று வெளியானது. அந்த வீடியோ காட்சியில் கருணாநிதி கையில் வைரமுத்துவின் கவிதை அச்சிடப்பட்ட காகிதம் ஒன்று இருக்கிறது. அப்போது, கருணாநிதிக்கு கைக் கொடுத்த வைரமுத்து பிடர் கொண்ட சிங்கமே பேசு.. என்று தனது கவிதையை வாசிக்க ஆரம்பித்தார். இதனை கேட்ட கருணாநிதி உற்சாகமும், மகிழ்ச்சியும் அடைந்தார். அவருக்கு பிடித்த வரிகள் வரும்போது அவரது முகத்தில் பொலிவு தெரிந்தது.

வைரமுத்து கவிதையை வாசித்து முடித்த பிறகு, கருணாநிதி அவரது காதில் ஏதோ கூறினார். இந்த காட்சி அனைவரையும் நெகிழச் செய்தது.

இதோ அந்த கவிதை வரிகள்.. 

“பிடர் கொண்ட சிங்கமே பேசு... இடர்கொண்ட தமிழர் நாட்டின் இன்னல்கள் தீருதற்கும், படர்கின்ற பழமை வாதம் பசையற்று போவதற்கும், சுடர்கொண்ட தமிழை கொண்டு சூள்கொண்ட கருத்துரைக்க... பிடர் கொண்ட சிங்கமே நீ பேசுவாய் வாய் திறந்து...

யாதொன்றும் கேட்க மாட்டேன்... யாழிசை கேட்க மாட்டேன்... வேதங்கள் கேட்க மாட்டேன்... வேய்ங்குழல் கேட்க மாட்டேன்... தீதொன்று தமிழுக் கென்றால் தீக்கனல் போலெழும்பும் கோதற்ற கலைஞரே... நின் குரல் மட்டும் கேட்க வேண்டும்...”

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds