தள்ளிவைக்கப்பட்ட ஐபிஎல் துவக்க விழா- முறைகேடுகளின் தாக்கமா..?

by Rahini A, Mar 5, 2018, 12:19 PM IST
ஐபிஎல் தொடரின் 11-வது சீசனுக்கான தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முன்னர், ஏப்ரல் 6-ம் தேதி இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த‍து. ஆனால், பிசிசிஐ வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில், `ஐபிஎல் தொடர் தொடக்கவிழா ஒருநாள் தளளிப் போடப்பட்டுள்ளது. ஏப்ரல் 7-ம்  தேதியன்று 11-வது சீசன் ஆரம்பமாகும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் அமைத்த நிர்வாக‍க் குழுவினருக்கு ஏதுவாக அமையவே இந்த தேதி மாற்றம் எனக் கூறப்படுகிறது.

கடந்த 2013-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் நடந்த சூதாட்ட முறைகேடுகளுக்குப் பின்னர் உச்ச நீதிமன்றம் நிர்வாக‍க் குழு ஒன்றை அமைத்த‍து. இந்த நிர்வாக‍க் குழு, ஐபிஎல் தொடரின் நடவடிக்கைகளை உற்று கவனிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்த‍து. இந்த குழுவினருக்கு ஏதுவாகவே தற்போது தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

சூதாட்ட முறைகேடுகளில் சிக்கியதால் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் பங்கு பெறாமல் இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இந்த ஆண்டு உற்சாகத்துடன் களம் காணுகின்றன. 11-வது சீசனின் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியே இந்நாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸுக்கும் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸுக்கும்தான் என்பது சுவாரஸ்யத்தை அதிகரிக்கச் செய்துள்ளன. 

You'r reading தள்ளிவைக்கப்பட்ட ஐபிஎல் துவக்க விழா- முறைகேடுகளின் தாக்கமா..? Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை