ரஜினி நடிகை மீது போலீசில் புகார்.. கொரோனா பயத்தால் பரபரப்பு..

police complaint against rajinis actress

by Chandru, Apr 25, 2020, 10:30 AM IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தாய் வீடு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் அனிதா ராஜ். இவர் மும்பையில் வசிக்கிறார். சமீபத்தில் இவர் தனது வீட்டில் தோழிகளை அழைத்து லாக்டவுன் நாளில் பார்ட்டி வைத்தார். இதனால் நிறைய பேர் அவரது வீட்டுக்கு வந்தனர். அக்கம் பக்கத்தில் உள்ள வீட்டார் இந்த பார்ட்டியால் கொரோனா தொற்று பரவுமோ என்று அச்சம் தெரிவித்தனர்.

இதையடுத்து அப்பகுதி வாட்ச்மேன் போலீசில் புகார் அளித்தார். போலீஸார் விரைந்து வந்து அனிதா ராஜ் மற்றும் அவரது கணவரிடம் விசாரணை நடத்தினர்.
பின்னர் இதுபற்றி தெரிவித்த அனிதா ராஜ், 'என் வீட்டில் பார்ட்டி எதுவும் நடக்கவில்லை. என் கணவர் ஒரு டாக்டர் எனது தோழியின் கணவருக்கு உடல் நிலை பாதித்ததால் அவரை அவசர சிகிச்சைக்காக என் வீட்டுக்கு அழைத்து வந்திருந்தார். அவருடன் உதவிக்கு இரண்டு பேர் வந்தனர். இதுதான் நடந்தது யாரோ கொடுத்த தவறான தகவலால் போலீசார் வந்து விசாரித்தனர். நடந்தது தெரிந்ததும் அவர்கள் ஸாரி கேட்டுவிட்டுச் சென்றார்கள்' என்றார்.

You'r reading ரஜினி நடிகை மீது போலீசில் புகார்.. கொரோனா பயத்தால் பரபரப்பு.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை