கணவன் அடித்தால் திருப்பி அடியுங்கள்: பொங்கி எழும் நடிகை வரலட்சுமி
கணவன் அடித்தால் மனைவி திருப்பி அடிக்க வேண்டும் என்று நடிகை வரலட்சுமி காட்டமாக கூறியது அனைவரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நடிகை வரலட்சுமி இன்று தனது 33வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவரது பிறந்த நாள் மற்றும் மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னையில் நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், ஒரு பகுதியாக ரத்ததான முகாம், அன்னதானம், மகளிருக்கான நலத்திட்ட உதவிகள் உள்ளிட்டவை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட வரலட்சுமி, பெண்களுக்கு நடக்கும் கொடுமைகள் பற்றி ஆவேசமாக பேசினார். அப்போது ஒரு கட்டத்தில், “ கணவன் அடித்தால் மனைவி திருப்பி அடிக்க வேண்டும்” என்று ஆவேசமாக பேசினார். இவரது பேச்சு, நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பெண்களிடையே ஆச்சரியத்தையும், அதிர்ச்சியடையவும் வைத்தது.
You'r reading கணவன் அடித்தால் திருப்பி அடியுங்கள்: பொங்கி எழும் நடிகை வரலட்சுமி Originally posted on The Subeditor Tamil
More Cinema News