முதல்வரை சந்தித்த டோலிவுட் சூப்பர் ஸ்டார்..

Tollywood biggies met KCR to ask film shooting permission

by Chandru, May 23, 2020, 11:08 AM IST

கொரோனா ஊரடங்கால் தமிழ். தெலுங்கு உள்ளிட்ட எல்லா திரையுலகிலும் படப்பிடிப்பு நடக்காமல் முடங்கிக்கிடக்கிறது. தமிழ்நாட்டில் தமிழ் படப்பிடிப்புகள் தொடங்க அனுமதி கேட்டு திரையுலகினர் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குக் கோரிக்கை வைத்திருக்கின்றனர். அதேபோல் தெலுங்கு படப் படப்பிடிப்புகளைத் தொடங்க தெலங்கானா முதல்வரிடம் டோலிவுட் திரையுலகினர் அனுமதி கேட்டிருக்கின்றனர்.


தெலங்கானா முதல்வர் கே.சி.சந்திரசேகரராவைத் தெலுங்கு பட சூப்பர் ஸ்டார் சிரஞ்ஜீவி, நாகார்ஜுனா, டி.ரமேஷ்பாபு, அல்லு அரவிந்த், என்.ஷங்கர், ராஜமவுலி, தில்ராஜு,திரிவிக்ரம் போன்ற முக்கிய பிரமுகர்கள் பலர் நேரில் சந்தித்துப் படப்பிடிப்பு நடத்திட அனுமதி கோரினர். அதற்கு அவர் கொரோனா கட்டுப்பாடு விதிகளை கடைப்பிடித்துப் படப்பிடிப்பு நடத்தச் சம்மதம் தெரிவித்திருக்கிறார்.அதற்கான அரசு உத்தரவு வந்தவுடன் படப்பிடிப்புகள் தொடங்க உள்ளது.

You'r reading முதல்வரை சந்தித்த டோலிவுட் சூப்பர் ஸ்டார்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை