தயாரிப்பாளர் சங்க தேர்தலில் 3வதாக களம் இறங்கும் விஷால் அணி..

Will Vishal and team contest in TFPC election?

by Chandru, May 24, 2020, 11:51 AM IST

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் விஷால் தலையில் இருந்த நிர்வாக குழுவைக் கலைத்துவிட்டு புதிதாகத் தேர்தல் நடத்தும்படியும் அதுவரை தனி அதிகாரி தலைமையில் சங்கம் செயல்பட வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து கோட்டில் மனுத் தாக்கல் செய்த போது கோர்ட் நிராகரித்ததுடன் வரும் ஏப்ரல் 30ம் தேதி தேர்தல் நடத்த ஆணையிட்டது.


இதையடுத்து தயாரிப்பாளர் டி.சிவா தலைமையில் ஒரு அணியும், முரளி ராமநாரயாணன் தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிடத் தயாரானது.இந்நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு நீடிப்பதால் பாதுகாப்பு கருதித் தேர்தலைத் தள்ளி வைக்க வேண்டு என்று ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதையேற்று வரும் செப்டம்பர் மாதம் இறுதிக்குள் தேர்தலை நடத்த உத்தரவிட்டது.

இந்நிலையில் நடிகர் விஷால் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளாராம். ஏற்கனவே விஷாலுடன் இணைந்து போட்டியிட்ட அதே குழு இத்தேர்தலிலும் போட்டியிடும் என்று தெரிகிறது.

You'r reading தயாரிப்பாளர் சங்க தேர்தலில் 3வதாக களம் இறங்கும் விஷால் அணி.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை