பாலியல் தொல்லையால் நடிப்பிலிருந்து விலகிய நடிகை..
Actress Tejaswi Speaks About Her Casting Couch Experience
தமிழில் 'நட்பதிகாரம் 79' என்ற படத்தில் நடித்தவர் தேஜஸ்வி மடிவாடா. தெலுங்கில் பல படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் கடைசியாகக் கடந்த 2017 ம் ஆண்டு பாலகிருஷ்ணடு என்ற படத்தில் நடித்தவர் அதன் பிறகு நடிப்பிலிருந்து ஒதுங்கி இருக்கிறார்.இது பற்றி தேஜஸ்வி கூறும்போது, திரையுலகில் காஸ்டிங் கவுச் தொல்லை அதிகம் உள்ளது. பட வாய்ப்புக்காக மற்றவர்களிடம் அட்ஜெஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள்.
அதுபோல் நிறையப் பேரைக் கடந்து வந்திருக்கிறேன். இந்த பாலியல் தொல்லையால் தான் நான் நடிப்பிலிருந்து விலகி இருக்கிறேன். இதனால் எனது எனது காதலும் முறிந்துபோனது. பாலிவுட்டிலிருந்து வரும் நடிகைகள் இதுபோன்ற தொல்லைகளைத் தெரிந்து அதற்கு விட்டுக்கொடுத்து நடிக்கின்றனர். அதனால் அவர்கள் அதிக படங்களில் நடிக்க வாய்ப்பு பெறுகிறார்கள்.
இவ்வாறு தேஜஸ்வி மடிவாடா கூறினார்.
You'r reading பாலியல் தொல்லையால் நடிப்பிலிருந்து விலகிய நடிகை.. Originally posted on The Subeditor Tamil
More Cinema News