நடிகருக்காக உயிர்விடும் ரசிகர்கள்.. சாவு எண்ணிக்கை 6 ஆக உயர்வு..
Sushants Fan Commits Suicide In Uttar Pradesh
இளம் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை திரையுலகில் மட்டுமல்லாமல் ரசிகர்கள் மத்தியிலும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டதை கேட்டு அதிர்ச்சி அடைந்த உறவுக்கார பெண் சாப்பிடாமல் இருந்து உயிர் விட்டார். இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு ஒடிசாவை சேர்ந்த 13 வயது ரசிகை, 50 வயது ரசிகர் ஒருவர் என இரண்டு பேர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டு இறந்தனர். இந்நிலையில் மேலும் 3 பேர் சுஷாந்த் போல் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவன் சுஷாந்த்தின் ரசிகன். இவர், சுஷாந்த் தற்கொலை செய்தியை டிவியில் பார்த்ததிலிருந்து மன அழுத்தத்திலிருந்தார். திடீரென்று அவர் தற்கொலை செய்து கொண்டு இறந்தார். அதேபோல் கிரேட்டர் நொய்டாவைச் சேர்ந்த 6ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவரும் தற்கொலை செய்து கொண்டார். சுஷாந்தை போலவே மாணவரும் அறைக்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
விசாகப்பட்டணத்தைச் சேர்ந்த பெண்ணும் தற்கொலை செய்து கொண்டு இறந்தார்.சுஷாந்த் சிங் கிரிக்கெட் வீரர் தோனியாக வாழ்க்கை படத்தில் நடித்தார். அப்போது முதல் சுஷாந்த்துக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் பெருகினர். அவரது திடீர் மரணம் பலரின் உயிர்களைப் பலிவாங்கி வருவது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
You'r reading நடிகருக்காக உயிர்விடும் ரசிகர்கள்.. சாவு எண்ணிக்கை 6 ஆக உயர்வு.. Originally posted on The Subeditor Tamil
More Cinema News