மறைந்த ஹீரோவுக்கு ஆண் குழந்தை பிறந்தது..
Actor Sethu Wife Gave Birth 2nd Child
தமிழ் திரையுலகில் வளர்ந்து வந்த இளம் நடிகர்களில் ஒருவர் சேது. இவர் தோல் சிகிச்சை டாக்டராகவும் இருந்தார். அண்ணாநகரில் மருத்துவமனையும் நடத்தி வந்தார்.நடிகர் சந்தானத்தின் நெருங்கிய நண்பர் சேது. இவரைச் சந்தானம் தான் திரையுலகுக்கு அழைத்து வந்தார். கண்ணா லட்டு தின்ன ஆசையா, 50 50, வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா ஆகிய படங்களில் நடித்துள்ளார். சேது, உமையாள் என்பவரை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். சேது மனைவி மீண்டும் கர்ப்பம் அடைந்தார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் சேது திடீர் மாரடைப்பில் மரணம் அடைந்தார். அதற்கு சில நாட்களுக்கு முன்பு தான் அவர் கொரோனா விழிப்புணர்வு வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார். சேது திடீர் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. நடிகர் சந்தானம் கடும் அதிர்ச்சியுடன் அவரது வீட்டுக்கு வந்து சேது உடலைப் பார்த்துக் கதறி அழுதார். எனது நண்பன் இப்படி இறந்துவிட்டானே என்று கண்ணீர் விட்டார். பின்னர் அவரது உடலைச் சுமந்து சென்றார்.மறைந்த சேது மனைவிக்குச் சமீபத்தில் பிரசவ வலி ஏற்பட்டது. அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. சேதுவே மீண்டும் பிறந்திருப்பதாக குடும்பத்தினர் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
You'r reading மறைந்த ஹீரோவுக்கு ஆண் குழந்தை பிறந்தது.. Originally posted on The Subeditor Tamil
More Cinema News