வயலில் நாகப்பாம்பை கையில் பிடித்த நடிகர்..

Simbu First Look From Suseedran Movie

by Chandru, Oct 26, 2020, 14:33 PM IST

நடிகர் சிம்பு கடந்த ஒன்றரை வருடமாகப் படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். பின்னர் ஹன்சிகா நடிக்கும் மஹா படத்தில் நடித்தார். இதையடுத்து வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு படப்பிடிப்பிலும் கலந்து கொண்டார். கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்புகள் முடங்கிய நிலையில் மாநாடு படமும் நின்றது.கொரோனா ஊரடங்கு தளர்வில் தனது உடல் எடையைக் குறைப்பதில் தீவிர கவனம் செலுத்தினார் சிம்பு. அதற்கு நல்ல பலன் கிடைத்தது. அத்துடன் புதிய படங்களில் நடிக்க ஸ்கிரிப்ட்டும் கேட்டார். இயக்குனர் சுசீந்திரன் சொன்ன கிராமத்துப் பின்னணியிலான ஸ்கிரிப்ட் மிகவும் பிடிக்கவே நடிக்க ஒப்புக் கொண்டார். உடனடியாக படப்பிடிப்பு வேலைகள் தொடங்கின.

திண்டுக்கல் பகுதியில் உள்ள கிராமத்தில் படப்பிடிப்பு தொடங்கியது. சிம்பு படப்பிடிப்பில் கலந்து கொண்டார். ஷூட்டிங் மின்னல் வேகத்தில் நடக்கிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று வெளியிட்ட சுசீந்திரன் படத்திற்கு ஈஸ்வரன் எனப் பெயரிட்டிருப்பதையும் அறிவித்திருக்கிறார்.வயலில் நிற்கும் சிம்பு நாகப்பாம்பைக் கையில் பிடித்தபடி அளித்திருக்கும் போஸ் ஒரு நிமிடம் அசரடிக்கிறது. இப்படம் பொங்கல் தினத்தில் வரும் என இயக்குனர் அறிவித்திருக்கிறார். சிம்பு நடிப்பில் மிகக் குறைந்த நாளில் படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வரும் படமாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தையடுத்து மாநாடு படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.

You'r reading வயலில் நாகப்பாம்பை கையில் பிடித்த நடிகர்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை