ரகசியமாக இரண்டாவது திருமணம் செய்து கொண்டு சர்ச்சையில் சிக்கிய பிரபலம்..!

by Logeswari, Nov 5, 2020, 11:47 AM IST

தமிழ், மலையாளம் போன்ற திரையுலகில் கலக்கி கொண்டிருப்பவர் தான் அமலா பால். இவர் இயக்குனர் விஜய் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். ஆனால் ஒரே வருடத்தில் கருத்து வேறுபாடு காரணத்திற்காக இருவரும் வாழ்ந்து வருகின்றனர். இதையடுத்து அவரை தேடி வருகின்ற திரைப்பட வாய்ப்புகளில் கவனம் செலுத்தி வந்தார்.

அவ்வப்பொழுது கவர்ச்சிகளைத் தெளிக்கும் விதமாக சில போட்டோஷூட்கள் செய்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதுவும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. சமீபத்தில் இவர் நடித்த ஆடை திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெற வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவர் ஆறு மாதங்களுக்கு முன்பு மும்பையைச் சேர்ந்த பாடகரான பவ்னிந்தர் சிங் என்பவருடன் ரகசியமாக திருமணம் செய்துள்ளதாகத் தகவல் கசிந்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் இவர்கள் எடுத்து கொண்ட புகைப்படங்கள் யாவும் ரகசியமாக இருக்க வேண்டும் என்று தனது கணவருடன் கூறியுள்ளார். ஆனால் அமலா பாலுக்குத் தெரியாமல் பாடகர் சோசியல் மீடியாவில் இவர்கள் திருமணம் செய்து கொண்ட போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இதனால் தனது இரண்டாவது கணவருடன் சண்டை போட்டும் தனது புகைப்படங்களைத் தவறாகப் பயன்படுத்துகிறார் என்று நீதி மன்றத்தில் அவர் மேல் பொய்யான வழக்குத் தொடுத்துள்ளார் அமலா பால். இதனால் அமலா பாலை கடுமையாக விமர்சித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

You'r reading ரகசியமாக இரண்டாவது திருமணம் செய்து கொண்டு சர்ச்சையில் சிக்கிய பிரபலம்..! Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை