மெர்சல் படத்திற்கு பிரிட்டனின் தேசிய விருது: படக்குழுவினர் மகிழ்ச்சி
பிரிட்டனின் தேசிய விருதை பெற்றது “மெர்சல்”: படக்குழுவினர் மகிழ்ச்சி
பிரிட்டனின் நான்காவது தேசிய திரைப்பட விழாவில், சிறந்த வெளிநாட்டு படப்பிரிவில் மெர்சல் திரைப்படத்திற்கு விருது கிடைத்தது. இதனால், படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.
அட்லி இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி சூட்டர் ஹிட் ஆன படம் “மெர்சல்”. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நித்யா மேனன், காஜல் அகர்வால் ஆகியோர் நடித்திருந்தனர். இவர்களை தவிர, சத்யராஜ், வடிவேலு, கோவை சரளா, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்தது.
மெர்சல் படம் ரிலீஸாவதற்கு முன்பும், பின்னரும் பல சாதனைகளை படைத்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பிரிட்டனின் நான்காவது தேசிய திரைப்பட விழா 2018ம் ஆண்டுக்கான விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில், பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்த படங்கள் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், இறுதியில் சிறந்த வெளிநாட்டுப் படம் பிரிவில் மெர்சல் படத்திற்கு விருது கிடைத்தது. இதனால், படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com
You'r reading மெர்சல் படத்திற்கு பிரிட்டனின் தேசிய விருது: படக்குழுவினர் மகிழ்ச்சி Originally posted on The Subeditor Tamil
More Cinema News