கங்கனா ரனாவத்தின் அலுவலகத்தை இடித்தது பழிவாங்கும் நடவடிக்கை.. மகாராஷ்டிர அரசுக்கு நீதிமன்றம் கடும் கண்டனம்

நடிகை கங்கனா ரனாவத்தின் அலுவலகத்தை இடித்தது பழிவாங்கும் நடவடிக்கை ஆகும். எனவே உரிய நஷ்ட ஈட்டுத் தொகையை 4 மாதத்திற்குள் கொடுக்க வேண்டும் என்று மகாராஷ்டிர அரசுக்கு மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்துக்கும், மகராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே அரசுக்கும்இடையே கடந்த சில மாதங்களாக கடும் மோதல் நீடித்து வருகிறது. மகாராஷ்டிர அரசுக்கு எதிராகவும், உத்தவ் தாக்கரேவுக்கு எதிராகவும் கங்கனா கடுமையான குற்றச்சாட்டுகளை கூறி வந்தார். இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் மும்பையிலுள்ள கங்கனாவின் பங்களாவின் ஒரு பகுதியை மும்பை மாநகராட்சி நிர்வாகம் இடித்து தள்ளியது.

அங்கு ரனாவத்தின் அலுவலகம் செயல்பட்டு வந்தது. மாநகராட்சி விதிகளை மீறி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது என்று கூறி கட்டடம் இடிக்கப்பட்டது. இதன்பின்னர் கங்கனா முன்பை விட ஆக்ரோஷமாக உத்தவ் தாக்கரேவை கடுமையாக தாக்கி வந்தார். மேலும் தன்னுடைய பங்களாவை இடித்து தள்ளிய மும்பை மாநகராட்சியின் நடவடிக்கைக்கு எதிராக அவர் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தனக்கு நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார். இந்த மனுவை மும்பை உயர் நீதிமன்றம் இன்று விசாரித்தது. அப்போது, நடிகை கங்கனா ரனாவத்தின் பங்களாவை இடித்தது மும்பை மாநகராட்சியின் பழிவாங்கும் நடவடிக்கையே தவிர வேறு ஒன்றும் இல்லை என்று நீதிபதி தெரிவித்தார்.

இது தொடர்பாக மும்பை மாநகராட்சிக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டார். பங்களாவை இடித்ததில் எவ்வளவு நஷ்டம் ஏற்பட்டது என்பது குறித்து கணக்கெடுக்க ஒருவரை நீதிமன்றம் நியமித்துள்ளது. அடுத்த வருடம் மார்ச்சுக்கு முன்பாக நஷ்ட ஈட்டுத் தொகையை கணக்கிட்டு அதை நடிகை கங்கனா ரனாவத்துக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்றும் மும்பை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் கங்கனாவின் சில கருத்துக்கள் ஏற்கத்தக்கதல்ல என்றும், பொது இடங்களில் மரியாதைக் குறைவான வார்த்தைகளை பேசக் கூடாது என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds

READ MORE ABOUT :