நட்சத்திர ஓட்டலில் ரூ 15 கோடி முதலீடு செய்த நடிகை..

நடிகர், நடிகைகள் தற்போது நடிப்பில் சம்பாதிப்பதை தொழிலில் முதலீடு செய்கின்றனர். நடிகர் ரகுல் ப்ரீத் சிங் கோடிகளில் முதலீடு செய்து உடற்பயிற்சி கூடங்கள் நடத்தி வருகிறார். நடிகை பிரணிதா கடந்த 2015ம் ஆண்டு பெங்களுர் புறநகர் பகுதியில் தண்ணீர் தொழிற்சாலை தொடங்கி லாபகரமாக நடத்தி வருகிறார். நடிகை நமீதா கன்ஸ்ட்ரக்‌ஷன் கம்பெனி தொடங்கி நடத்தி வருகிறார். நடிகை சமந்தா சொந்தமாக பேஷன் டிசைன் கம்பெனி தொடங்கி நடத்துகிறார். இதற்காக கொரோனா லாக்டவுனில் பேஷன் டிசனிங் முறைப்படி கற்றுத் தேர்ந்தார். நடிகர் சூரி மதுரையில் ஓட்டல்களில் கோடிகளில் முதலீடு செய்து நடத்துகிறார். வில்லன் நடிகரும் கொரோனா கால கட்டத்தில் பல்லாயிரம் பேருக்கு உதவிகள் செய்து மக்கள் மனதில் ஹீரோவான சோனு சூட் மும்பையில் நட்சத்திர ஓட்டல் நடத்தி வருகிறார்.

இந்த ஒட்டலை கொரோனா காலகட்டத்தில் சுகாதார பணியாளர்கள், டாக்டர்கள் தங்கி பயன்படுத்திக்கொள்ளவும் அனுமதி அளித்தார். இதுபோன்ற நடசத்திர தொழில் அதிபர்கள் பட்டியலில் தற்போது மற்றொரு பிரபல நடிகையும் இணைந்திருக்கிறார். தமிழில் மிஸ்டர் ரோமியோ படத்தில் பிரபுதேவா ஜோடியாக நடித்ததுடன். குஷி படத்தில் விஜய்யுடன் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியவர் ஷில்பா ஷெட்டி. இவர் இந்தியில் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். இவர் தற்போது மும்பையில் பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றில் 10 முதல் 15 கோடிவரை முதலீடு செய்து 50 சதவீத ஷேர்கள் வாங்கி இருக்கிறார். கிட்ட தட்ட அவர் நட்சத்திர ஓட்டல் அதிபராகி இருக்கிறார். இதுபற்றி அவர் இன்ஸ்டாகிராமில் குறிப்பிடும்போது, இது தயாராகிவிட்டது, விரைவில் நடைமுறைக்கு வருகிறது என கூறியிருக்கிறார். முன்னதாக அவர் தனது ஓட்டலுக்கு பாலிவுட் நண்பர்கள், தோழிகள் சிலரை ஓட்டலுக்கு விருந்துக்கு அழைத்தார்.

அதில் நடிகர் ரிதேஷ் தேஷ்முக் அவரது மனைவி நடிகை ஜெனிலியா கலந்துகொண்டனர். ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்தராவும் இதில் பங்கேற்றார். கடந்த 9 மாதத்தில் முதல்முறையாக இன்றுதான் இரவில் வெளியில் வந்து உணவு எடுத்துக் கொண்டிருக்கிறேன். நண்பர்களுடன் பழகினேன் என தெரிவித்தார் ஷில்பா. முன்னதாக ஷில்பா, ராஜ்குந்தரா இருவரும் தங்கம் பத்திரம் விற்கும் நிறுவனம் ஒன்றில் பார்டனாராக இருந்தனர். அப்போது விற்ற பத்திரத்தில் கோடிகள் பணம் வாங்கிக்கொண்டு தங்கம் தராமல் ஷில்பாவும் ராஜ்குந்தராவும் ஏமாற்றிவிட்டனர் என்று வெளிநாட்டை சேர்ந்த ஒரு நபர் மும்பை போலீஸில் புகார் கொடுத்தார். ஆனால் அவர் பொய் சொல்வதாக ஷில்பா செட்டி தெரிவித்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு நிகம்மா மாறும் ஹங்கமா2 ஆகிய படங்களில் ஷில்பா நடிக்க உள்ளார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds

READ MORE ABOUT :