போதை வழக்கில் ஜாமீன் பெற்ற நடிகை என்னவானார்? ஷூட்டிங்கிற்கு போகவில்லை..

தமிழ் மற்றும் கன்னட படங்களில் நடித்திருப்பவர்கள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி. கடந்த செப்டம்பர் மாத வாக்கில் பெங்களுரில் போதை மருந்து கடத்தும் கும்பல் ஒன்றை போலீஸார் கைது செய்து விசாரித்தனர். அப்போது இந்த விஷயத்தில் கன்னட திரையுலகினருக்கு தொடர்பு இருப்பதாக தகவல் தெரியவந்தது. இதையடுத்து விசாரணையை அதிகாரிகள் முடக்கி விட்டனர். இதில் போது ராகினி திவேதி பெயரும் சஞ்சனா கல்ரானி பெயரும் வெளியானது. ராகினியை விசாரணைக்கு அழைத்த அதிகாரிகள் பின்னர் அவரை செப்டம்பர் 4ம் தேதி கைது செய்தனர். அவரை தொடர்ந்து சஞ்சனா கல்ராணியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி செப்டம்பர் 8ம் தேதி கைது செய்து இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பெங்களுரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைத்தனர். சிறையில் ராகினிக்கும், சஞ்சனாவுக்கும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை பிரித்து வேறு கைதிகள் உள்ள அறையில் அடைத்தனர்.

இதே வழக்கில் நடிகைகளின் நண்பர்கள் உட்பட 14 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களும் சிறையில் உள்ளனர். சஞ்சனாவும் ராகினியும் ஜாமீன் கேட்டு நீதி மன்றத்தில் மனு செய்தனர். ஆனால் இருவரது மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில் ராகினி திவேதி தன்னை தவறாக இந்த வழக்கில் கைது செய்திருக்கிறார்கள். கீழ் கோர்ட்டில் ஜாமீன் கேட்டு மறுக்கப்பட்டது. எனவே எனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி கீழ்கோர்ட்டில் இதுபற்றி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. இதற்கிடையில் நடிகை சஞ்சனா கல்ராணி ஜாமீன் கேட்டு கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில் தனக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருந்தார். அவருக்கு பரிசோதனை செய்யும்படி மருத்துவமனைக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி பரிசோதனை செய்ததில் அவருக்கு உடல் நிலை பாதிப்பு இருப்பது உறுதியானது.

இதையடுத்து அவருக்கு நிபந்தனை ஜாமீன் கிடைத்தது. மாதம் ஒருநாள் வந்து போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கப்பட்டது. கைதாகி 3 மாத சிறை வாசத்துக்கு பிறகு அவர் ஜாமீனில் வந்திருக்கிறார். நடிகை சஞ்ஜனாவுக்கு புதிய பட படப்பிடிப்பு இருந்த போதிலும் அவர் ஷூட்டிங் செல்லாமல் வீட்டிலேயே இருக்கிறார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர். உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் சஞ்சனா வீட்டிலேயே ஓய்வு எடுத்து வருகிறார். மேலும் மீடியாக்களுக்கு பேட்டி அளிக்கக் கூடாது என்று அவரது வழக்கறிஞர்கள் அறிவுரை வழங்கி உள்ளனர். வீட்டில் உடல் நிலை சரியாகாத நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படலாம் என்று தெரிகிறது. தனக்கு பின்னால் கைது செய்யப்பட்டு தனக்கு முன்பே ராகினி ஜாமீன் பெற்றதை அறிந்து வருத்தத்தில் இருக்கிறாராம் ராகினி திவேதி.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
Tag Clouds

READ MORE ABOUT :