பா.ரஞ்சித் படம் கேரள சர்வதேச பட விழாவுக்கு தேர்வு

by Chandru, Dec 28, 2020, 19:57 PM IST

கபாலி பட இயக்குனர் பா.ரஞ்சித் தயாரித்துள்ள படம் குதிரைவால். கேரள சர்வதேச திரைப்பட விழாவிற்கு இந்தியப் பிரிவில் திரையிட தேர்வாகியுள்ளது. 2018-ஆம் ஆண்டு வெளியான 'பரியேறும் பெருமாள்' படத்தின் மூலம் தயாரிப்பாளராக மாறினார், இயக்குநர் பா. ரஞ்சித். அப்படம் அவ்வருடத்தின் சிறந்தப் படமாக கொண்டாடப்பட்டு விருதுகளைக் குவித்தது. அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு, 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' படத்தையும் தயாரித்தார். அப்படமும் வெற்றி பெற்றது. இந்நிலையில், கடந்த ஆண்டு தனது நீலம் புரடொக்‌ஷன் மூலம், மேலும் 5 படங்களை தயாரிப்பதாக அறிவித்தார். அதில், ஒன்றுதான் குதிரை வால். இப்படத்தை யாழி நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார். மனோஜ் லியோனல் ஜேசன் மற்றும் ஷாம் சுந்தர் ஆகியோர் இப்படத்தை இயக்க, கலையரசன் - அஞ்சலி பாட்டில் நடித்துள்ளனர்.

இப்படத்தின், டீசர் கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி வெளியாகி வரவேற்பைப் பெற்றது. அறிவியல் புனைக்கதையில் அரசியல் வசனங்களும் இடம் பெற்று கவனம் ஈர்த்தது. இந்நிலையில், 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதியிலிருந்து 19 ஆம் தேதிவரை திருவனந்தபுரத்தில் கேரள அரசின் கலாசார விவகாரங்கள் துறையால் நடத்தப்படும் கேரள சர்வ தேச திரைப்பட விழாவில் இந்திய பிரிவில் திரையிட தேர்வாகியிருக்கிறது. காலா படத்துக்கு பிறகு படம் இயக்காமலிருந்த பா.ரஞ்சித் தற்போது சார்பட்டா பரம்பரை என்ற படம் இயக்கி வருகிறார். இதில் ஆர்யா பாக்சிங் வீராக நடிக்கிறார். இதற்காக அவர் உடலை கட்டுமஸ்தாக்கி நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது.

You'r reading பா.ரஞ்சித் படம் கேரள சர்வதேச பட விழாவுக்கு தேர்வு Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை