மணிரத்னம் படத்துக்கு முன் மற்றொரு ஷூட்டிங்கை முடித்த த்ரிஷா..

by Chandru, Jan 26, 2021, 18:01 PM IST

மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் சரித்திர படத்தில் நடிக்கிறார் த்ரிஷா. கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் திரைப்படமாகிறது. ஏற்கனவே இப்படத்துக்காக விக்ரம், ஐஸ்வர்யாராய், ஜெயம் ரவி நடித்த காட்சிகள் வட மாநிலத்தில் அடர்ந்த காட்டுப் பகுதியில் கொரோனா ஊரடங்கிற்கு முன்பு படமாக்கப்பட்டது. கொரோனா ஊரடங்கால் படப் பிடிப்பு தடைப்பட்டது. கடந்த 9 மாதமாக படப்பிடிப்பு தொடங்கப் படவில்லை. ஊரடங்கு தளர்வில் படப்பிடிப்பு நடத்த அரசு அனுமதி வழங்கிய நிலையில் படப்பிடிப்பு தொடங்க மணிரத்னம் திட்டமிட்டார்.

ஆனால் ஐஸ்வர்யா ராய்க்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அதில் குணம் அடைந்தவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு இருந்து வந்தார். இதற்கிடையில் படப்பிடிப்பை மீண்டும் தொடங்குவது குறித்து மணிரத்தினம் ஐஸ்வர்யாராயிடம் பேசி வந்தார். ஜனவரியில் படப் பிடிப்பு தொடங்க முடிவானது. அதன்படி ஐதராபாத்தில் பொன்னியின் செல்வன் படப் பிடிப்பு சத்தமில்லாமல் தொடங்கியது. இப்படத்தில் ஐஸ்வர்யாராய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். சரத்குமாருடன் ஐஸ்வர்யாராய் நடித்த காட்சிகள் பிரமாண்டமான அரண்மனை அரங்கில் படமானது.

இப்படத்தில் அமிதாப்பச்சன், ஜெயம் ரவி, கார்த்தி, பார்த்திபன், நிழல்கள் ரவி, ரியாஸ் கான், லால், விக்ரம் பிரபு, திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கின்றனர் . இதில் குந்தவை என்ற கதாபாத்திரத்தில் திரிஷா நடிக்கிறார். கடந்த வாரத்தில் திரிஷா ஐதராபாத் சென்று இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். பொன்னியின் செல்வன் கதாபாத்திரத்துக்கு சரித்திர நாவலை ஏற்கனவே அவர் ஒருமுறை முழுமையாகப் படித்தார். தற்போது 2வது முறையாக அந்த புத்தகத்தைப் படித்து வருகிறார். குந்தவை கதாபாத்திரத்தில் தனது நடிப்பு தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக மற்ற கதாபாத்திரங்களின் குணாதிசயங்களை அறிந்து கொள்ளவே இப்படி அவர் மீண்டும் மீண்டும் நாவலைப் படித்து வருகிறாராம். காரில் எங்காவது சென்றால் பயணத்தின்போதும் பொன்னியின் செல்வன் புத்தகத்தோடு தான் செல்கிறார்.

திரிஷா பொன்னியின் செல்வன் படம் தவிர கைநிறை படங்கள் வைத்திருக்கிறார். கொரோனா லாக்டவுனில் வீட்டிலிருந்தபடியே கவுதம் மேனன் இயக்கிய கார்த்தி டயல் செய்த எண் என்ற குறும்படத்தில் நடித்தார். இதில் சிம்புவும் அவர் வீட்டிலிருந்தபடி நடித்தார். இப்படம் நெட்டில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.மேலும் பரமபதம் விளையாட்டு, கர்ஜணை, சதுரங்க வேட்டை 2. ராங்கி, சுகர், ராம் ஆகிய படங்களில் நடிக்கிறார். பொன்னியின் செல்வன் படப் பிடிப்பில் திரிஷா கலந்து கொண்டார். அதில் கலந்து கொள்வதற்கு முன் நீண்ட நாட்களாகக் காத்திருந்த ராங்கி படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு அதை முடித்துக்கொடுத்தார். இப்படத்தை எம்.சரவணன் இயக்குகிறார். இதன் இறுதிக்கட்ட படப் பிடிப்பு நேற்று முடிந்தது.

You'r reading மணிரத்னம் படத்துக்கு முன் மற்றொரு ஷூட்டிங்கை முடித்த த்ரிஷா.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை