குளம் வெட்டும் பணிக்காக ரூ.25 லட்சம் வழங்கிய பாலிவுட் நடிகர்

Apr 17, 2018, 22:02 PM IST

விவசாயிகள் அதிகமாக வாழும் மாராட்டிய மாநிலம் சடாரா பகுதிக்கு சென்ற பாலிவுட் நடிகர் குளம் வெட்டும் பணிக்காக ரூ.25 லட்சம் வழங்கி விவசாயிகளை நெகிழச்செய்துள்ளார்.

நடிகர் அக்‌ஷய்குமார் நடித்து வரும் ‘கேசரி’ பட சூட்டிங் மராட்டிய மாநிலம் சடாரா பகுதியில் நடைபெற்றது. விவசாயிகள் அதிகமாக வாழும் சடாரா கிராமத்தில் மழை நீரை சேமிப்பதற்காக குளம் தோண்டும் பணி நடந்து வந்ததை கேள்விப்பட்டு படப்பிடிப்புக்கு சிறிது நேரம் இடைவெளிவிட்ட அக்‌ஷய்குமார், குளம் தோண்டும் இடத்துக்கு சென்றார்.மேலும் கிராம மக்களுடன் சேர்ந்து மண்வெட்டி பிடித்து குளம் தோண்டும் வேலையிலும் ஈடுபட்டார்.

பின்னர், அக்‌ஷய்குமார் குளம் வெட்டும் பணிக்காக கிராம மக்களுக்கு ரூ.25 லட்சம் வழங்கினார். இதனால் கிராமமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இது மட்டுமல்ல, மக்களிடையே பேசுகையில் அவர் விவசாயிகள் கண்களில் கண்ணீர் வருவதை நான் விரும்பவில்லை மாறாக குழாய்களில் தண்ணீர் வருவதை நான் பார்க்க விரும்புகிறேன் என்றதும் அங்கு கூடியிருந்த அனைவரும் நெகிழ்ந்து போனார்கள்.

தான் நடிக்கும் சினிமாவில் மட்டும் அல்ல நிஜத்திலும் மக்கள் மீது அக்கறையுடனும் சேவை மனப்பான்மையுடனும் பல்வேறு உதவிகள் செய்வதிலும் சமூக அக்கறை கொண்டு செயல்படுபவர்களில் அக்சய் குமாரும் ஒருவர் என பேசிக்கொண்டனர்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading குளம் வெட்டும் பணிக்காக ரூ.25 லட்சம் வழங்கிய பாலிவுட் நடிகர் Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை