ஹீரோயினை ஒப்பந்தம் கொட்டும் மழையில் சென்ற இயக்குனர்..

by Chandru, Feb 9, 2021, 20:07 PM IST

கயல் ஆனந்தி நடிக்கும் படம் கமலி ஃப்ரம் நடுக்காவேரி. இமான் அண்ணாச்சி, பிரதாப்போத்தன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் வரும் 19ம் தேதி திரைக்கு வருகிறது. முன்னதாக படத்தின் மீடியா சந்திப்பு இன்று மாலை நடந்தது. அதில் படத்தில் பங்கேற்றவர்கள் கலந்து கொண்டு பேசினர். கலந்து கொண்டு பட அனுபவதை பகிர்ந்தார்கள். பட இயக்குநர் ராஜசேகர் துரைசாமி பேசும்போது,
நான் திருச்சி மாவட்டம் பச்சைமலை அடிவாரம். என்னுடைய வாழ்க்கையில் அனைத்துப் பக்கங்களிலும் தூணாக இருந்தவர்கள் என்னுடைய அண்ணன் மற்றும் அண்ணி தான். நான் தான் ஆண் கமலி. என்னுடைய பெண் வர்க்கம் தான் கமலி கதாபாத்திரம். அரசாங்க வேலையில் இருக்கும் ஒருவர் தன்னுடைய மகனை தனியார் பள்ளியில் படிக்க வைத்தார். அந்த இடம் தான் இப்படத்தின் கருவாக தோன்றியது. நாயகி படமாக எடுத்தால் தான் முழுக்க முழுக்க குடும்ப பொழுது போக்கு திரைப்படம். இப்படத்தில் கமலி காதல் செய்யும் போது எப்படி இருப்பாள்? மகளாக எப்படி இருப்பாள்? என்று ஒவ்வொரு கட்சியை நான் எப்படி எதிர்பார்க்கிறேனோ அப்படியே நடித்துக் கொடுத்தார்.

அபுண்டு ஸ்டூடியோஸ்-ன் துரைசாமி என்னுடைய கதையைக் கேட்டதும் என் பொறுப்பிலேயே அனைத்தையும் விட்டுவிட்டார்கள். இந்த கதை எழுதும்போது எனக்கு நினைவிற்கு வந்தது ஆனந்தி மட்டும் தான். ஆனால், ஆனந்தி ஒப்பந்தமானது எளிதாக நடக்கவில்லை. நீங்கள் இருக்கும் இடத்திற்கு நாங்கள் வருகிறோம். கதை கேளுங்கள் பிடித்தால் பணியாற்றுங்கள் என்று கூறினோம். உடனே, வாரங்கல் சென்றோம். அங்கு அடைமழை பெய்துக் கொண்டிருந்தது. ஒரு ஆட்டோ பிடித்து அவர் வீட்டுக்கு சென்றோம். அவரது பெற்றோர் வரவேற்றனர். கதை கூறினோம். கதை கேட்ட அடுத்த நிமிடம் இப்படத்தை எப்போது எடுக்கலாம். நான் தான் இதில் நடிக்க என்ன செய்ய வேண்டும் என்று ஒரு முறையிலேயே நடித்துக் கொடுத்தார்கள். படம் ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை கமலியாகவே வாழ்ந்தார். அவருக்கு மிக்க நன்றி. பிரதாப் போத்தனிடம் கதை கூறியதும் மிகவும் ஆர்வமாக பணியாற்றினார். பெரிய மனிதருக்குள்ளும் குழந்தைத்தனம் இருக்கும் என்பதை அவரிடம் கண்டேன். இப்படத்தில் நடிகர்கள் மட்டும் அல்ல அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் அர்ப்பணிப்போடு பணியாற்றினார்கள்.

இசையமைப்பாளர் தனக்கென்று இசையமைக்காமல், படத்திற்கு என்ன தேவையோ அதை செய்தார் இவ்வாறு இயக்குனர் கூறினார். கயல் ஆனந்தி பேசும்போது, என்னுடைய வாழ்க்கையிலும், சினிமாவிலும் இது முக்கியமான படம். இப்படம் அனைவருக்கும் சென்று சேர வேண்டும். அனைத்து பெண்களையும் இணைக்கும் விதமாக இருக்கும். பெற்றோர்கள் ஊக்கமளிக்கும் விதமாக இருக்கும். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படம் என்றதும் பலரும் ஏன் இதேபோல படங்களைத் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்று கேட்டதுதான் நினைவிற்கு வந்தது. ஆனால், இந்த கதாபாத்திரம் கிடைத்தது எனக்கு அதிர்ஷ்டம். இப்படத்தை நிறைய பெற்றோர்களும், பிள்ளைகளும் பார்க்க வேண்டும் என்றார். மேலும் பட தயாரிப்பாளர்கள், பிறகலைஞர்கள் பேசியது வருமாறு: தயாரிப்பாளர் துரைசாமி:ஒரு படம் தயாரித்தால் அது நல்லா திரைப்படமாக தயாரிக்க வேண்டும் என்றிருந்தோம். இப்படத்தின் கதையைக் கேட்டதும் மெய் சிலிர்த்து அனைத்து பொறுப்பையும் இயக்குனரிடம் விட்டு விட்டோம். ஆனந்தி, பிரதாப் போத்தன் முதல் அனைவரும் டெடிகேட்டா பணியாற்றி இருக்கிறார்கள்.

மாஸ்டர் பீஸ் வெங்கடேஷ் விநியோகிக்க முன் வந்தார் தயாரிப்பாளர் குமணன்: இப்படத்தை பெற்றோர்கள் பார்க்க வேண்டும். இப்படம் 100% குடும்பத்துடன் பார்க்க வேண்டிய திரைப்படம் பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா: சேலம் மாவட்டம் சின்னனுர் கிராமத்தில் இருந்து வந்தவன். பொருளுக்காக பேசுவது, காரியத்திற்காக பேசுவது குறைந்திருப்பது கிராமப்புறங்களில் தான். நாம் அனைவரும் உலகத்திற்குள் அடங்கிய கிராமம் தான். நான் எப்போதும் என்னுடைய அறையில் அமர்ந்துதான் பாடல்கள் எழுதுவேன். ஆனால், இப்படத்திற்கு இயக்குநர் அறையில் முதன் முதலாக பாடல்கள் எழுதியிருக்கிறேன். 'நீரில் மின்னல்களாய்' என்ற வரி எனக்கு மிகவும் பிடித்த வரி. என்னைப் பொறுத்தவரை பாடல்களின் வரிகள் காட்சியிலும், கேட்பதற்கும் அர்த்தம் மிகுந்ததாக ஒரு பாதிப்பு இருக்க வேண்டும் என்றார். மற்ற கவிஞர்கள் யுகபாரதி, மதன் கார்க்கி எழுதிய படல்களும் மிகவும் பிடித்திருந்தது. நடிகை ஸ்ரீஜா: தேனியில் பிறந்து வளர்ந்ததால் இப்படத்தில் என்னை சுலபமாக இணைத்துக் கொள்ள முடிந்தது. இந்த தருணத்தில் 'நக்கலைட்ஸ்' யு-டியூப்- க்கு நன்றி கூற விரும்புகிறேன்.

இப்படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தின் பெயர் வள்ளி. அந்த பாத்திரத்தை என்னுடைய தோழியை உதாரணமாக எடுத்துக் கொண்டேன். இமான் அண்ணாச்சி பேசியது: தூத்துக்குடி மாவட்டம் ஏரல் கிராமத்தில் இருந்து சினிமாவிற்கு வந்தேன். இப்படத்தின் மூலம் அருமையான கதாபாத்திரத்திற்கு என்னைத் தேர்ந்தெடுத்து கொடுத்த இயக்குநருக்கு நன்றி. இப்படத்தில் நீங்கள் எல்லாவற்றையும் எதிர்பார்க்கலாம். கயல் ஆனந்தி சிறப்பாக நடித்திருக்கிறார். இப்போதைக்கு இருக்கும் சூழலில் திரையரங்கைப் பற்றி நாம் நன்கு அறிவோம். ஆகையால், இப்படம் நிச்சயம் வெற்றிபெறும். உதவி இயக்குநர் மற்றும் இணை இயக்குநர்கள் நடிப்பு வரும்வரைவிடாமல் வேலை வாங்கியிருக்கிறார்கள். இசையமைப்பாளர் தீனதயாளன்: இப்படத்தில் எனக்கு வாய்ப்புக் கொடுத்த அபுண்டு ஸ்டூடியோஸ் மற்றும் இயக்குநருக்கும் நன்றி. இப்படத்தின் கதைக் கூறியதில் இருந்து இப்போது வரை விறுவிறுப்பு குறையவில்லை. அந்த அளவிற்கு கதைக் கூறும்போதே இயக்குநர் விறுவிறுப்பை ஏற்படுத்தி விட்டார். நடிகர் பிரதாப் போத்தன்: இப்படத்திற்காக இயக்குநர் ராஜசேகர் அழைக்கும்போது நோபல் காதல் கதையாக தோன்றியது. இக்கதையை மிகவும் பிடித்துதான் நடிக்க வந்தேன். இவ்வாறு அவர்கள் பேசினார்கள்.

You'r reading ஹீரோயினை ஒப்பந்தம் கொட்டும் மழையில் சென்ற இயக்குனர்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை