குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறிய பவித்ரா.. வெளியிட்ட முதல் பதிவு..

by Logeswari, Mar 20, 2021, 21:25 PM IST

தனியார் தொலைக்காட்சி மிக பிரபலமான நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகி வருவது குக் வித் கோமாளி 2. இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டில் மட்டும் இல்லாமல் வெளிமாநிலங்களிலும் பல ரசிகர்கள் பட்டாளங்கள் இயங்கி வருகின்றது. சீரியலை விட மக்கள் இந்நிகழ்ச்சிக்காக சனி கிழமை வரும் வரை காத்துகொண்டு இருக்கின்றனர். வாரம் வாரம் கோமாளிகள் குக்குகளுடன் சேர்ந்து சமைத்து மற்றும் அவர்களது காமெடி மூலம் மக்களை சந்தோஷப்படுத்தி வருகின்றனர். இதனால் தான் இந்த நிகழ்ச்சிக்கு கோடிக்கணக்கான பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.

இந்நிலையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் அஸ்வினுக்கு பவித்ராவுக்கு கடுமையான போட்டி நடைபெற்றது. அதில் அஸ்வினை விட மிக குறைந்த மதிப்பெண் பெற்றதால் பவித்ரா நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். அப்பொழுது அவர் சோசியல் மீடியாவில் முதல் முறையாக இந்நிகழ்ச்சியினை பற்றி ஒரு பதிவு போட்டு இருந்தார். அதாவது இது ஒரு அற்புதமான பயணம். உங்களின் அளவில்லாத அன்புக்கும் ஆதரவுக்கும் மனமார்ந்த நன்றி. குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியில் எனக்கு உறுதுணையாக நின்ற அனைவருக்கும் நன்றி என்று உருக்கமாக பதிவிட்டு இருந்தார்.

You'r reading குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறிய பவித்ரா.. வெளியிட்ட முதல் பதிவு.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை