தேர்தல் முடிந்த கையோடு மீண்டும் திரைத்துறைக்கு திரும்பும் உதயநிதி – படப்பிடிப்பு எப்போது?

by Sasitharan, Apr 6, 2021, 11:49 AM IST

சூறாவளி பிரசாரம் செய்துகொண்டிருந்த நடிகரும், அரசியல்வாதியுமான உதயநிதி ஸ்டாலின் திரைத்துறைக்கு மீண்டும் திரும்புவார் என கூறப்படுகிறது. தேர்தல் வேலைகள் அனைத்தும் முடிந்து விட்டதால், தனது ஆர்டிக்கிள் 15 படத்தின் படப்பிடிப்பை நடிகர் உதயநிதி ஸ்டாலின் விரைவில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடித்த `ஆர்டிக்கள்15 என்ற திரைப்படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய முடிவு செய்யபட்டது. அதன்படி இந்த படத்தில் உதயநிதி நடிக்க இருக்கிறார். ஆனால் இதனிடையே தேர்தல் களம் சூடுபிடித்ததால் தனது பார்வையை அரசியல் நோக்கி திருப்பினார் உதயநிதி. சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் சுழன்றி அடித்துகொண்டிருக்கிறார்.

மேலும் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற வேட்பாளராகவும் போட்டியிடுகிறார். தேர்தல் பிரசாரம், தேர்தல் வேளைகள் ஓய்ந்துவிட்ட நிலையில் அவர் மீண்டும் திரைத்துறைக்கு திரும்புவார் என கூறப்படுகிறது. சமீபத்திய தகவல்கள் என்னவென்றால், அதன் படப்பிடிப்பு ஏப்ரல் இறுதிக்குள் அல்லது 2021 மே மாத ஆரம்பத்தில் துவங்கும் என்பது தான்.

'ஆர்டிக்கிள் 15 படத்தின் தமிழ் ரீமேக்கை அருண்ராஜா காமராஜ் இயக்குகிறார். அவர் ஏற்கனவே கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான 'கனா' படத்தை இயக்கி, பாராட்டுகளைப் பெற்றார். போனி கபூர் தனது பேவியூ புராஜெக்ட்ஸ் சார்பிலும், ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் ரோமியோ பிக்சர்ஸ் ஆகியவற்றுடனும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

இந்த படத்தில் ஆயுஷ்மான் குர்ரானவின் கதாபாத்திரத்தை பிரதிபலிக்கும் உதயநிதி, சாதி வேற்றுமை பிரச்னைகள் உள்ள கிராமப்புறத்திற்கு அனுப்பப்படும் உயர் பதவியில் உள்ள போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். படத்திற்கான படப்பிடிப்பில் விரைவில் கலந்துகொள்ள உள்ளார் உதயநிதி என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை நிறுவுவதற்காக நடப்பட்ட செங்கலை தூக்கிக் காட்டியவாறு அவர் செய்த பிரச்சாரம், இத்தேர்தலில் ஹைலைட்டாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

You'r reading தேர்தல் முடிந்த கையோடு மீண்டும் திரைத்துறைக்கு திரும்பும் உதயநிதி – படப்பிடிப்பு எப்போது? Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை