தடுப்பூசி போட்டதால் எனக்கு என்ன நடந்தது? – வீடியோ வெளியிட்ட நடிகர் செந்தில்

by Ari, Apr 14, 2021, 10:25 AM IST

தடுப்பூசி போட்டதால் எனக்கு என்ன நடந்தது? – வீடியோ வெளியிட்ட நடிகர் செந்தில்

தமிழ் சினிமாவில் மிகப்பெரும் நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் செந்தில். இவரை விரும்பாத ரசிகர்களே இருக்க முடியாது. சினிமாவை போல அரசியலில் மிகந்த ஆர்வம் உடையவர் செந்தில். அ.தி.மு.க. மற்றும் அ.ம.மு.க. கட்சிகளில் இருந்த அவர், அண்மையில் பாஜக-வில் இணைந்தார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்காக நடிகர் செந்தில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

இந்நிலையில் நடிகர் செந்தில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக கடந்த சில தினங்களாக சென்னையை ஒட்டிய காட்டான்குளத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். அவரைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். நடிகர் செந்திலின் உடல் சிகிச்சைக்கு முழுமையாக ஒத்துழைப்பதாகவும், இதனால் அவர் உடலில் தொடர்ந்து முன்னேற்றம் காணப்படுவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நடிகர் செந்திலுக்கு நாளை மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நடிகர் செந்தில், தான் நலமுடன் இருப்பதாக வீடியோ வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், “எனக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டது உன்மைதான். யாரும் பயப்பட வேண்டாம் நான் நன்றாக இருக்கிறேன். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் யாரும் பயப்பட தேவையில்லை. பரிசோதனை செய்துவிட்டு வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். மருத்துவர் கூறிய மருந்துகளை எடுத்துக்கொள்ளுங்கள். முன்கூட்டியே தடுப்பூசி போட்டுக்கொண்டதால், கொரோனா வைரசால் எனக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. நீங்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்”.

என்று நடிகர் செந்தில் கூறியுள்ளார்.

You'r reading தடுப்பூசி போட்டதால் எனக்கு என்ன நடந்தது? – வீடியோ வெளியிட்ட நடிகர் செந்தில் Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை