உங்களால் தான் நான் இந்த இடத்துக்கு வந்துள்ளேன் – தாய் குறித்து தனுஷின் நெகிழ்ச்சி பதிவு!

by Madhavan, Apr 14, 2021, 20:40 PM IST

நடிகர் தனுஷ் அவரது தாயாரின் பிறந்தநாளையொட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். இதை பார்த்த அவரது ரசிகர்கள் பலரும் அவரது பதிவை ஷேர் செய்து வருகின்றனர்.

இரண்டு தேசிய விருதுகளுக்கு சொந்தக்காரர். நடிப்பு அசுரன். ஹாலிவுட் நாயகன். எந்த கதாபாத்திரத்திலும் கச்சிதமாக பொருந்தக்கூடியவர் என்ற பல புகழ்களை சம்பாதித்த நடிகர் தனுஷ் தன் தாயின் மீது அளப்பரிய பாசத்தை கொண்டிருப்பவர். இதனை விருது மேடைகளில் காணலாம். ஒருமுறை விருது வழங்கும் விழா ஒன்றில் பேசிய அவர், ``அம்மாவ யாருக்கு தான் பிடிக்காது. காக்கா குருவிக்கு கூட தான் அம்மா ணா பிடிக்கும் என்று பேசிய அப்லாஸ்களை அள்ளியிருப்பார்.

வெறும் பேச்சு மட்டுமல்ல. நிஜத்திலும் தாய் மீது அளவுகடந்த பாசம் வைத்திருப்பவர் அவர். இன்று தனுஷின் தயார் பிறந்தநாள். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்துகள்தான் அனைவரையும் ஈர்த்துள்ளது. தாயார் குறித்து தனுஷ் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டதாவது, “ எனது தெய்வமான அம்மாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

உங்களின் அளவில்லா அன்பாலும், பிரார்த்தனையாலும் நான் இதுவரை வந்துள்ளேன். எனது தெய்வம் நீண்ட காலம் வாழ வேண்டும். குடும்பத்திற்காக நீங்கள் சகித்துக்கொண்டதற்கு ஈடாக, எங்களால் எதுவும் செய்ய இயலாது. நான் என்னை ஒரு நல்ல மகனாக மாற்றிக்கொள்ளவும், உங்களை பெருமைபடுத்தவும் தொடர்ந்து முயற்சிக்கிறேன்” இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தனுஷின் நடிப்பு குறித்து பலரும் அவரை வியந்து பாராட்டி வருகின்றனர்.

You'r reading உங்களால் தான் நான் இந்த இடத்துக்கு வந்துள்ளேன் – தாய் குறித்து தனுஷின் நெகிழ்ச்சி பதிவு! Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை