சமரசமாக பேச முடியவில்லை - விரக்தியில் இயக்குநர் சங்கர்!

by Madhavan, Apr 28, 2021, 16:41 PM IST

இந்தியன் 2 பட தயாரிப்பு விவகாரம் தொடர்பாக, இயக்குநர் சங்கர் மற்றும் தயாரிப்பு நிறுவனத்துக்கும் இடையிலான சமரச பேச்சு தோல்வியடைந்து விட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

நடிகர் கமல் நடிப்பில் இந்தியன் – 2 திரைப்படத்தை லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார். இந்நிலையில், தங்கள் நிறுவனத்தின் இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு நிறுவனங்களின் படங்களை இயக்குவதற்கு இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்க வேண்டுமென லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது

படத்திற்கு 150 கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கிய நிலையில், 236 கோடி ரூபாய் வரை செலவு செய்து இருப்பதாகவும், ஆனாலும் 80 சதவீத பணிகள் மட்டுமே முடிந்து இருப்பதாகும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, இரு தரப்பினரும் கலந்து பேசி சுமூக தீர்வு காண நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது

இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இயக்குநர் சங்கர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், கடந்த சனிக்கிழமை இயக்குநர் சங்கர் மற்றும் தயாரிப்பு நிறுவனத்தின் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், இரண்டரை மணி நேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தையில், ஜூன் முதல் அக்டோபர் மாதத்துக்குள் படத்தை முடித்துக் கொடுத்து விடுவதாக சங்கர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதை தயாரிப்பு நிறுவனம் தரப்பில் ஏற்கவில்லை எனவும், தயாரிப்பு நிறுவனம் ஜூன் மாதத்தில் படத்தை முடிக்க வலியுறுத்தியதால், பேச்சுவார்த்தை தோல்வியடைந்து விட்டதால் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளலாம் என தெரிவித்தார்.

இயக்குனர் சங்கர் தரப்பு விளக்கத்தை கேட்காமல் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஜூன் மாதத்துக்கு தள்ளிவைத்தனர்

You'r reading சமரசமாக பேச முடியவில்லை - விரக்தியில் இயக்குநர் சங்கர்! Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை