தனுஷுக்கு அப்புறம் சூர்யா தான்.. என்ன சொல்கிறார் சாய் பல்லவி ?
மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படத்தில் அறிமுகமாகி பிரபலமடைந்தவர் நடிகை சாய் பல்லவி. இவர் தமிழில் நடிக்கும் முதல் திரைப்படம் 'தியா' வரும் வெள்ளிக்கிழமை 27ந் தேதி வெளியாகவுள்ளது.
சாய் பல்லவி தற்போது தனுஷின் மாரி-2 படத்தில் நடித்து வருகிறார். படம் மிக வேகமாக உருவாகி வருகிறது. சென்னையில் உள்ள பின்னி மில்ஸ்-ல் பரபரப்பான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. ஆக்சன் காட்சிகள் முடிந்த பிறகு சாய் பல்லவி நடிக்கவுள்ள பகுதிகள் படமாக்கப்படவுள்ளது.
தனுஷுடன் நடிக்க வேண்டிய காட்சிகள் முடிந்த பிறகு இம்மாத இறுதியில் சூர்யா நடிக்க இருக்கும் என்ஜிகே திரைப்படத்தில் சாய் பல்லவி இணைய உள்ளார். இப்படத்தை செல்வராகவன் இயக்குகிறார்.
தமிழ் சினிமாவில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள தமிழ் நடிகைகளின் வரிசையில் முதல் இடம் பிடித்துள்ளவர் சாய் பல்லவி. ஏற்கனவே இவருக்கு கிடைத்த பல படங்களின் வாய்ப்புகளை வேண்டாம் என்று ஒதுக்கி தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தனுஷ், சூர்யா பின்னர் தெலுங்கில் பெயர் வைக்கப்படாத படம் ஒன்றில் சர்வானந்த் ஜோடியாக நடிக்கவுள்ளார் சாய் பல்லவி.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com
You'r reading தனுஷுக்கு அப்புறம் சூர்யா தான்.. என்ன சொல்கிறார் சாய் பல்லவி ? Originally posted on The Subeditor Tamil
More Cinema News
READ MORE ABOUT :