ரசிகர்களை முட்டாளாக்கி விட்டனர் - ரஜினியை தாக்கிய பாரதிராஜா

by Lenin, Apr 30, 2018, 21:47 PM IST

கட் - அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்ய சொல்லி சிலர் ரசிகர்களை முட்டாளாக்கி விட்டனர் ரசிகர்களை என இயக்குநர் பாரதிராஜா நடிகர் ரஜினிகாந்தை தாக்கிப் பேசியுள்ளார்.

சென்னை வடபழனியில் ’காட்டு பய சார் இந்த காளி’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் பாரதிராஜா அவர்கள் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய பாரதிராஜா, “காவேரி பிரச்னைக்கு அறவழியில் போராட்டம் நடத்தியும் தீர்வு எட்டப்படவில்லை என்றால் வேறு வழியில் போராடுவோம். கடைசி மூச்சு இருக்கும் வரை தமிழ் மொழிக்கு இழுக்கு வர விட மாட்டேன். பாலியல் வன்கொடுமை செய்பவர்களை 1000 பேர் முன்னால் சுட்டுக் கொல்ல வேண்டும்.

கட் - அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்ய சொல்லி சிலர் ரசிகர்களை முட்டாளாக்கி விட்டனர். `காட்டுப் பய காளி’ என்று வசனம் பேசியவர்தான் இன்று நாட்டையும் ஆள வேண்டும் என்கிறார். மிகவும் கேவலமான ஒரு சூழ்நிலை. சினிமாவில் இருந்து கொண்டு நானே இதை எல்லாம் பேச வேண்டியிருக்கிறது” என்று மறைமுகமாக ரஜினியை தாக்கிப் பேசியுள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading ரசிகர்களை முட்டாளாக்கி விட்டனர் - ரஜினியை தாக்கிய பாரதிராஜா Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை