இந்த உலகிலேயே சந்தோஷமானவள்- உச்சகட்ட மகிழ்ச்சியில் சமந்தா

by Rahini A, May 11, 2018, 20:17 PM IST

நடிகை சமந்தா, `நான் தான் இந்த உலகத்திலேயே மிகவும் மகிழ்ச்சியானப் பெண்’ என்று கூறியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி எனப் பல்வேறு மொழிகளில் நடித்து கடந்த சில ஆண்டுகளாக டோலிவுட், கோலிவுட்டின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் சமந்தா. சமீபத்தில் அவருக்கு தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா மகன் நாகசைதன்யா உடன் திருமணம் முடிந்தது.

இதனால், திருமண வாழ்க்கையில் பிஸியாகி, திரை வாழ்க்கைக்கு கொஞ்சம் ரெஸ்ட் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முன்பைவிட இப்போதுதான் அவர் தமிழ், தெலுங்கு எனப் பல திரைப்படங்களிலும் நடித்துக் குவித்துக் கொண்டிருக்கிறார்.

குறிப்பாக கடந்த சில வாரங்களில் அவருக்கு தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் மூன்று திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. இதனால் அவர் அளவுகடந்த மகிழ்ச்சியில் உள்ளார்.

இது குறித்து தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் சமந்தா, `இந்த சம்மர் எனக்கு மிகவும் ஸ்பெஷல். அனைவருக்கும் மிக்க நன்றி. `ரங்காஸ்தலம்’, `நடிகையர் திலகம்’ மற்றும் `இரும்புத்திரை’ என்ற ஹாட்ரிக் படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளன. நான் தான் இந்த உலகத்திலேயே மிகவும் மகிழ்ச்சியான பெண்’ என்று ஆனந்தத்தில் பூரித்துள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading இந்த உலகிலேயே சந்தோஷமானவள்- உச்சகட்ட மகிழ்ச்சியில் சமந்தா Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை