ஐபிஎல் 2018 நிறைவு விழா: தொகுத்து வழக்குகிறார் ரன்பீர் கபூர்!

by Rahini A, May 21, 2018, 16:15 PM IST

மும்பையில் நடக்க உள்ள ஐபிஎல் நிறைவு விழாவை பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் தொகுத்து வழங்க உள்ளார்.

வருகிற மே 27-ம் தேதி மும்பையில் ஐபிஎல் இறுதிப்போட்டியின் முதல் தகுதிச்சுற்று நடைபெற உள்ளது. மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற இப்போட்டியின் துவக்க 2 மணி நேர விழாவை பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் தொகுத்து வழங்க ஒப்பந்தமாகியுள்ளார்.

கூடுதலாக பாலிவுட் சூப்பர் நட்சத்திர அந்தஸ்தில் உள்ள சல்மான் கான், ஜாக்லின் ஃபெர்னாண்டஸ், கரீனா கபூர், சோனம் கபூர் ஆகியோரும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று அசத்த உள்ளனர்.

முதல் தகுதிச் சுற்றைத் தொடர்ந்து தகுதிச்சுற்று 2 கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. மீண்டும் மும்பை வான்கடே மைதானத்தில் இறுத்திப்போட்டி நிகழும்.

முதல் தகுதிச் சுற்று சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையில் நடக்க உள்ளது. கூடுதலாக மராத்தி நேரலை வர்ணனையை இம்முறை மாதுரி தீக்‌ஷித் தொகுத்து வழங்க உள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading ஐபிஎல் 2018 நிறைவு விழா: தொகுத்து வழக்குகிறார் ரன்பீர் கபூர்! Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை