ஜெய்ப்பூர் கோட்டையில் சூப்பர் ஸ்டாருக்கு மெழுகு சிலை
ஜெய்ப்பூர் கோட்டையில் உள்ள பிரபல மெழுகு அருங்காட்சியகத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு மெழுகுச் சிலை வைக்கப்பட்டுள்ளது. இதனால், ரசிகர்கள மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், பா.ரஞ்ஜித்தின் இயக்கத்தில் காலா படம் வெளியாகி சக்கப்போடு போட்டு வருகிறது.
இந்நிலையில், ஜெய்ப்பூர் கோட்டையில் உள்ள மெழுகு அருங்காட்சியகத்தில் நடிகர் ரஜினி சிலையை அமைக்க ரசிகர்கள் சார்பில் கேட்டுக் கொண்டனர். அதன்படி, காலா ரிலீசான ஜூன் 7ம் தேதி அன்று நடிகர் ரஜினியின் 5.9 அடி உயரத்தில் 55 கிலோ எடை கொண்ட மெழுக சிலை அருங்காட்சியகத்தில் அமைக்கப்பட்டது.
இந்த சிலையை காண பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். ரஜினியின் மெழுகுச் சிலை வைக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
You'r reading ஜெய்ப்பூர் கோட்டையில் சூப்பர் ஸ்டாருக்கு மெழுகு சிலை Originally posted on The Subeditor Tamil
More Cinema News