சாவித்திரியை தொடர்ந்து எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கை வரலாறு படமாகிறது

by Isaivaani, Jun 29, 2018, 23:28 PM IST

நடிகர் ராதாரவியின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தை இயக்கப்போவது யார் தெரியுமா ? வேறு யாருமில்லை எம்.ஆர்.ராதாவின் பேரன் ஜக் தான் இந்தப் படத்தை இயக்க இருக்கிறார்.

சினிமாவில் மூட நம்பிக்கைகளுக்கு எதிராக கருத்து சொன்னவர் எம்.ஆர்.ராதா. அன்றைய காலக்கட்டத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென தனி முத்திரையை பதித்தவர் எம்.ஆர்.ராதா. இதனால், இவருக்கு நடிகவேள் என்ற பட்டத்தை மக்கள் வழங்கினர்.
இவருடைய பிள்ளைகளான, ராதாரவி, ராதிகா, நிரோஷா ஆகியோர் சினிமாவில் கொடிகட்டி பறந்தனர்.

இந்நிலையில், எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கப்போவதாக அவரது பேரன் ஜக் அறிவித்துள்ளார்.

பேரனாக மட்டுமல்லாமல் அவரது ரசிகனாகவும் என் தாத்தாவின் வெளிவராத கதையை படமாக்குவேன் என ஜக் தெரிவித்துள்ளார். ஜக் சங்கில் புங்கிலி கதவைத் தொற படத்தின் மூலம் அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading சாவித்திரியை தொடர்ந்து எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கை வரலாறு படமாகிறது Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை