இரண்டாவது திருமணத்திற்கு பச்சைக்கொடி காட்டிய விஜய்

by Isaivaani, Jul 5, 2018, 16:00 PM IST
அஜித்தின் கிரீடம் படம் மூலம் அறிமுகமான இயக்குனர் திரு.விஜய். மதரசா பட்டினம், தெய்வ திருமகள், தாண்டவம், சைவம், தளபதியின் தலைவா, தேவி, இது என்ன மயக்கம், என வெற்றி படங்களை இயக்கியவர். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் தியா.
இவர் இயக்கத்தில் வெளிவந்த தெய்வ திருமகள், தலைவா படத்தில் நடித்திருந்த நடிகை அமலா பாலுடன் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக மாறியது.  பெற்றோரின் சம்மதத்துடன் 2014ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால் 2 வருடங்களிலேயே  இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடுகள் வரத்துவங்கியது. பின்னர் இருவரும் சமரசம் பேசி இருதரப்பும் விவாகரத்து வாங்கிவிட்டனர்.
 
கடந்த பிப்ரவரி மாதம் இருவருக்கும் விவாகரத்து கிடைத்தது. அமலாபால் தொடர்ந்து படங்களில் நடிக்க துவங்கினார். இயக்குனர் விஜய்யும் படங்களை இயக்க துவங்கினர்.
 
தற்போது இருவரும் பிரிந்ததற்கு காரணம் என்ன என்பதை கூறியுள்ளார் விஜய். "நம்பிக்கை, நேர்மை இல்லாது வாழ்வதில் பயன் இல்லை".  நாங்கள் பிரிந்ததற்கு இதுவே காரணம் என்று கூறினார். மேலும், தான் இயக்கும் படங்களில் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ளது போன்றே கதைகளில் சித்தரிப்பவன் என்றும் கூறினார். 
இந்நிலையில் இயக்குனர் விஜய்-கு 2வது திருமணம் நடத்தி வைக்க அவரின் பெற்றோர் முயற்சித்தனர். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்து வந்த விஜய் தற்போது திடிரென சம்மதம் தெரிவித்துவிட்டார்.
 
இயக்குனர் விஜய்-கு 2வது திருமணம் நடக்க உள்ளது என்பது நிச்சயமாக மாறிவிட்டது. மண பெண் தேடும் படலம் வேகமாக நடந்து வருகிறது. இந்நிலையில் கைவசம் உள்ள 2 படங்களை வேகமாக முடிக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

You'r reading இரண்டாவது திருமணத்திற்கு பச்சைக்கொடி காட்டிய விஜய் Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை