டெல்லி 11 பேர் தற்கொலை: சிக்கிய சிசிடிவி ஆதாரம்!

Jul 5, 2018, 16:08 PM IST

டெல்லியை உலுக்கிய 11 பேர் கொண்ட குடும்பத்தின் தற்கொலை சம்பவத்தில் புதிதாக ஒரு சிசிடிவி ஆதாரம் சிக்கியுள்ளது.

டெல்லியில் உள்ள புகாரி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 7 பெண்கள், 4 ஆண்கள் உட்பட 11 பேர் தூக்கிட்டு உயிரிழிந்துள்ளனர். அவர்களின் கண்களும் வாயும் துணியால் கட்டப்பட்டுள்ளது. மர்மமான முறையில் 9 பேர் வீட்டின் உள்ளே தூக்கில் கண்டறியப்பட்டுள்ளன. ஒருவர் தோட்டத்தில் இறந்து கிடந்தார். மற்றொரு வயதான பெண்மணி படுக்கறையில் இறந்து கிடந்துள்ளார்.

மரணம் அடைந்திருந்த அனைவரும் 15 முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்களாக உள்ளனர். நேற்று வெளியான பிரேத பரிசோதனை முடிவுகளும் அவர்களின் மரணம் தூக்கிட்டு செய்துகொண்ட தற்கொலை தான் என்பதை உறுதி செய்தது.

இந்நிலையில், ’பத் பூஜா’ என்ற மத நம்பிக்கையின் காரணமாக அந்த குடும்பமே தற்கொலை செய்து கொண்டுள்ளது. பிரேத பரிசோதனையில் 11 பேரும் உயிர் பிரியும் வேளையில் எந்தவொரு கஷ்டமும் அனுபவிக்கவில்லை. தாமாக முன்வந்து நிதனமாக பக்தி என்ற பெயரில் ஒரு சடங்கு முறையாக இந்தத் தற்கொலை முடிவை எடுத்துள்ளனர் என்பது விசாரணையில் வெளியாகி உள்ளது.

மேலும், விசாரிக்கும் போலீஸாரைக் குழப்பும் வகையில் பல தடயங்கள் அந்தத் தற்கொலை நடந்த வீட்டில் இருந்து கிடைத்துக் கொண்டே இருக்கிறது. அனைத்தும் மூட நம்பிக்கைகளால் விளைந்த தடயங்களாகக் கிடைத்து வந்த வேளையில் தற்போது அந்தக் குடும்பத்தார் தற்கொலைக்கு தயாராகும் வீடியோ காட்சி ஒன்று போலீஸாரின் கைகளுக்குக் கிடைத்துள்ளது.

You'r reading டெல்லி 11 பேர் தற்கொலை: சிக்கிய சிசிடிவி ஆதாரம்! Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை