ஏ.ஆர்.முருகதாஸ் ஜி... கிரீன் பார்க் ஹோட்டல்... கொளுத்தி போட்ட நடிகை ஸ்ரீரெட்டி!
ஏ.ஆர்.முருகதாஸ் மீது நடிகை ஸ்ரீரெட்டி புகார்
சினிமாவில் வாய்ப்பளிப்பதாக கூறி இயக்குநர் முருகதாஸ் தன்னை ஏமாற்றிவிட்டார் என நடிகை ஸ்ரீரெட்டி குற்றம்சாட்டியுள்ளார்.
தெலுங்கு திரையுலகில் திரைப்பட வாய்ப்பு கேட்கும் நடிகைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவதாக கூறி, தெலுங்கு நடிகர்கள் சங்க அலுவலகம் முன் அரைநிர்வாணப் போராட்டம் நடத்தி சர்ச்சையை கிளப்பியவர் நடிகை ஸ்ரீரெட்டி. நடிகர் பவன் கல்யாண், நானி ஆகியோர் மீது இவர் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினார்.
நடிகை ஸ்ரீரெட்டி பற்ற வைத்த நெருப்பு, தெலுங்கு சினிமாவில் காட்டு தீயாய் பரவி பலரை சுட்டெரித்தது. தமிழ் இயக்குநர் ஒருவர், தம்மிடம் தவறாக நடக்க முயன்றார் என்ற அதிர்ச்சி தகவலை நடிகை ஸ்ரீ ரெட்டி, அண்மையில் வெளியிட்டிருந்தார்.
இப்போது, தமது சமூக வலைதள பக்கத்தில், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸூக்கு அனுப்பியுள்ள ஒரு பதிவை வெளியிட்டு, புதிய சர்ச்சையை தொடங்கி உள்ளார். அதில், "கிரீன் பார்க் ஹோட்டலில் வெலிகொண்டா ஸ்ரீநிவாஸ் மூலம் சந்தித்தோமே என்னை ஞாபகம் இருக்கிறதா முருகதாஸ் ஜி. வாய்ப்பு தருவதாகக் கூறி ஏமாற்றிவிட்டீர்கள்."
"ஆனால் நமக்குள் பல.... இன்னும் வாய்ப்பளிக்கவில்லை. நீங்களும் பெரிய மனிதர்தான்.."என பதிவிட்டுள்ளார். இதனால் இயக்குநர் முருகதாஸ் மீது சந்தேகம் எழுந்துள்ளது.
அவரை சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். ஸ்ரீரெட்டியின் இந்த புகார் தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
You'r reading ஏ.ஆர்.முருகதாஸ் ஜி... கிரீன் பார்க் ஹோட்டல்... கொளுத்தி போட்ட நடிகை ஸ்ரீரெட்டி! Originally posted on The Subeditor Tamil
More Cinema News