எலி பட தயாரிப்பாளர் கைது

எலி பட தயாரிப்பாளர் சதீஷ்குமார் கைது

Jul 14, 2018, 21:52 PM IST

பண மோசடி வழக்கில் எலி திரைப்பட தயாரிப்பாளர் சதீஷ்குமாரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

Arrested

நடிகர் வடிவேல் கதாநாயகனாக நடித்த எலி திரைப்படம் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தின் தயாரிப்பாளர் மதுரை சதீஷ்குமார், படத்தயாரிப்புக்காக சினிமா பைனான்சியர் சைதாப்பேட்டை ராம்குமாரிடம் ஒன்றரை கோடி ரூபாய் கடன் வாங்கியிருந்தார்.

படம் வெளிவந்த ஒரு மாதத்தில் பணத்தை வட்டியுடன் திருப்பித்தருவதாக கூறியுள்ளார். 2 வருடத்துக்கு மேல் ஆகியும் பணத்தை திருப்பித்தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் பணத்தை தி்ருப்பிக்கேட்டபோது தரமுடியாது என மறுத்து ராம்குமாரை மி்ரட்டியுள்ளார்.

இதுகுறித்து ராம்குமார் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். இந்நிலையில். தலைமறைவாக இருந்த சதீஷ்குமாரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

You'r reading எலி பட தயாரிப்பாளர் கைது Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை