சம்பளம் தராமல் தயாரிப்பாளர்கள் ஏமாற்றினர்- விஷ்ணு விஷால் குற்றச்சாட்டு

Vishnu Vishal charge Producer

Oct 27, 2018, 08:04 AM IST

தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சம்பளம் தராமல் தன்னை ஏமாற்றியதாக விஷ்ணு விஷால் கூறியுள்ளார்.

Vishnu Vishal

விஷ்ணு விஷால் நடிப்பில் அண்மையில் வெளியான ராட்சசன் படம் பயங்கரமான ஹிட் அடித்துள்ளது. ரஜினி மற்றும் ஷங்கர் போன்ற திரையுலக ஜாம்பவான்களே படத்தை பார்த்து பாராட்டியுள்ளனர்.

இந்நிலையில், விஷ்ணு விஷால் தயாரிப்பாளராக மாறியதன் பின்னணி பற்றி கேட்டதற்கு ’நல்ல படங்கள்ல நடித்தேன்; அதுல சில படங்களில் எனக்கு பாதிச் சம்பளம்கூட கைக்கு வரவில்லை. அதையெல்லாம் பொருட்படுத்தாமதான், ஓடிக்கிட்டு இருந்தேன். சில தயாரிப்பாளர்கள் நான் ஓடுறதைப் பயன்படுத்திக்கிட்டாங்க.

‘கமர்ஷியல் படம்னு நீங்க இறங்கினா... காணாமப் பேயிடுவீங்க’னு சம்பளம் தராத ஒரு தயாரிப்பாளர் சொன்னார். யோசிச்சா, அவர் சொல்றது சரின்னுதான் தோணுச்சு. அதை மாத்தத்தான், `வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்துல நடிச்சேன்.

அதுக்கு வேற ஒருத்தர்தான் தயாரிப்பாளர், சில பிரச்னைகளால நானே தயாரிக்க வேண்டியதா போயிடுச்சு. `கதாநாயகன்’ படத்துக்கும் அதே நிலைமைதான்.

இப்படி சினிமாவுல தொடர்ந்து எதையாவது கத்துக்கிட்டே இருக்கேன். சுருக்கமாச் சொல்லணும்னா, எனக்குத் தயாரிப்பாளர் ஆகணும்னு ஆசை கிடையாது, சூழ்நிலை என்னை அப்படி ஆக்கிடுச்சு” என்று கூறியுள்ளார்.

You'r reading சம்பளம் தராமல் தயாரிப்பாளர்கள் ஏமாற்றினர்- விஷ்ணு விஷால் குற்றச்சாட்டு Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை