சர்கார் பிரச்சனையில் கைது செய்யப்படுவாரா விஜய்?

சர்கார் பட பிரச்சனை இன்னும் குறையவில்லை ஏ.ஆர் முருகதாசை போலிசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விஜய் வீட்டில் இருந்து வெளியேறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


படம் வெளியானலும் சர்ச்சைகள் குறையவில்லை, அதிமுக மற்றும் திமுக-வை நேரடியாகவே விமர்சித்து பல காட்சிகள் இடம்பெற்றுள்ளது, அதிலும் ஜெயலலிதாவின் இயற்பெயர் கோமளவல்லி என்று பெயரை வில்லிக்கு வைத்தும், அரசு இலவசங்களுக்கு எதிராக அனல் பறக்கும் வசனம் பேசுகின்றார் நடிகர் விஜய், இதனை பார்த்து கொந்தளித்த அதிமுக அமைச்சர்கள் படத்திற்கு ஏதிர்ப்பு தெரிவித்து வந்தார்கள்.

மேலும் ஒரு பாடல் காட்சியில் இயக்குனர் முருகதாஸ் வீட்டில் உள்ள இலவச பொருட்களான கிரைன்டர், மிக்சியை துக்கி போட்டு கொளுத்துவது போன்ற காட்சி இடம்பெற்று அதிமுகவில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது இந்த காட்சிக்கு தான். இதற்கு சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார், இந்த செயல் மக்களை வன்முறைக்கு தூண்டிவிடுவதாக தெரிவித்திருந்தார்.

மேலும் வன்முறையை தூண்டும் வகையில் படம் எடுத்த முருகதாஸ் மற்றும் விஜய் படத்தை வெளியிட்ட திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்க நேற்று சென்னையில் தலைமை வழக்கறிஞர் விஜய நாரயணனுடன் அமைச்சர் ஆலோசனை நடத்தினார். பிறகு வன்முறை தூண்டும் வகையில் காட்சிகளை வைத்த இயக்குனர் முருகதாசை கைது செய்ய நள்ளிரவில் விருகம்பாக்கத்தில் உள்ள முருகதாஸ் வீட்டிற்கு போலீஸ் சென்றது, விஷயம் அறிந்த முருகதாஸ் போலீசார் வருவதற்குள் தப்பி ஓடிவிட்டார் என்ற தகவல் வெளியானது, மேலும்  இயக்குநர் முருகதாஸ் வீட்டுக்கு போலீசார் சென்ற தகவலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பரப்பியது. ஆனால் காவல்துறை தரப்பில் முருகதாஸ்க்கு பாதுகாப்பு அளிக்க சென்றதாக விளக்கம் தரப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமைச்சர் சி வி சண்முகம் விஜய் தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் வசனம் பேசியதாக கூறியிருந்தார், இதனை தொடர்ந்து நடிகர் விஜய் கைது செய்யப்படலாம் என்ற தகவலை தொடர்ந்து நேற்று தனது வீட்டில் இருந்து நடிகர் விஜய் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

விஜய் படத்திற்கு எதிராக பல இடங்களில் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், விஜய் ரசிகர்கள் அமைதிக்கு காரணம் விஜயின் உத்தரவு என்று சொல்லப்படுகிறது. எந்த இடத்திலும் அதிமுகவினருடன் மோதல் ஏற்பட கூடாது என்று விஜய் ரசிகர் மன்ற பொறுப்பாளர் மூலம் அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் உடனடியாக தகவல் சொல்லப்பட்டதுதான் காரணம் என்று கூறப்பட்டு வருகிறது.

இந்த பிரச்சனைக்கு இடையில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதாக சன்பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது. இந்நிலையில் முருகதாஸ் தம்மை போலீஸ் கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார். இம்மனு மீது பிற்பகலில் விசாரணை நடைபெற உள்ளது குறிப்பிடதக்கது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds