இங்கிலாந்து டெஸ்ட்... இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா இல்லை!

by Sasitharan, Jan 29, 2021, 21:03 PM IST

சென்னையில் தங்கியுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு நடத்தப்பட்ட முதல் கட்ட பரிசோதனையில் அனைவருக்கும் கொரோனா இல்லை என்று தெரியவந்துள்ளது. அடுத்த மாதம் இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொள்ள இங்கிலாந்து அணி, இந்திய கிரிக்கெட் அணியுடன் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. மேலும், அதற்கு பின்னர், டி20 மற்றும் ஒருநாள் தொடர்களிலும் விளையாடவுள்ளது.

இந்தியா-இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் பிப்ரவரி 5-ம் தேதி முதல் 9-ம் தேதி வரையும், 2-வது போட்டி சொன்னையில் பிப்ரவரி 13-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நடைபெறுகிறது. 3-வது மற்றும் 4-வது டெஸ்ட் போட்டிகள் அகமதாபாத்தில் நடக்கிறது.

இதற்கிடையே, டெஸ்ட்டி போட்டியில் பங்கேற்பதற்காக இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வீர்ரகள் ஏற்கெனவே சென்னை வந்துவிட்டனர். அனைத்து வீரர்களும் கொரோனா தடுப்பு விதிமுறையின் கீழ் 6 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதனிடையே, கிரிக்கெட் வீரர்களுக்கு 3 முறை கொரோனா பரிசோதனை செய்யப்படும். இதில், முதல் முறை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இந்திய வீரர்களுக்கு கொரோனா இல்லை என்று தெரியவந்துள்ளது. வீரர்களுக்கான அனைத்து பரிசோதனைகளும் முடிக்கப்பட்டு பிப்ரவரி 2- ம் தேதி முதல் பயிற்சியில் ஈடுபடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

You'r reading இங்கிலாந்து டெஸ்ட்... இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா இல்லை! Originally posted on The Subeditor Tamil

More Cricket News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை