இந்தியாவுக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி 6 ரன்களில் ரோகித் சர்மா அவுட்

by Nishanth, Feb 7, 2021, 11:07 AM IST

சென்னை டெஸ்டில் இந்தியாவுக்கு முதல் இன்னிங்சில் தொடக்கத்திலேயே அதிர்ச்சி அளிக்கும் வகையில் 6 ரன்களில் ரோகித் சர்மா ஆட்டமிழந்தார். சென்னை டெஸ்ட் போட்டியில் டாசில் வெற்றி பெற்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அந்த அணியின் கேப்டன்ஜோ ரூட்டின் அற்புதமான இரட்டை சதத்தால் 578 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து தரப்பில் தொடக்க ஆட்டக்காரர் சிப்லி 87 ரன்களும், ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் 82 ரன்களும் எடுத்தனர். பந்துவீச்சில் பும்ரா மற்றும் அஷ்வின் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா மற்றும் ஷஹ்பாஸ் நதீம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதன் பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், சுப்மான் கில்லும் களமிறங்கினர். இருவரும் சிறப்பாக ஆடி வந்தனர். ஆனாலும் தொடக்கத்திலேயே இந்திய அணிக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது. ஜோப்ரா ஆர்ச்சரின் பந்தில் ரோகித் சர்மா, விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லரிடம் கேட்ச் கொடுத்து 6 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து 19 ரன்களில் இந்தியா முதல் விக்கெட்டை இழந்தது. இதன் பின்னர் சுப்மான் கில்லுடன் புஜாரா ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடி வருகின்றனர்.

You'r reading இந்தியாவுக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி 6 ரன்களில் ரோகித் சர்மா அவுட் Originally posted on The Subeditor Tamil

More Cricket News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை