ஜம்மு காஷ்மீரில் பயங்கரம்: பாஜக பிரமுகர் சுட்டுக் கொலை

Aug 22, 2018, 09:16 AM IST

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் பாஜக பிரமுகர் ஒருவரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தின் ரக் இ லிட்டர் பகுதியில் வசித்து வந்தவர் ஷபிர் அகமது பட். பாஜக பிரமுகரான இவர், நேற்று இரவு அவரது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது, இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில், பயங்கரவாதிகள் சிலர் ஷபிரின் வீட்டிற்குள் நுழைந்தனர். பின்னர், கண்ணிமைக்கும் நேரத்தில், ஷபிரை பயங்கரவாதிகள் சரமாரியாக சுட்டுத்தள்ளினர். இதில், ஷபிர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், அங்கு விரைந்து ஷபிரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

You'r reading ஜம்மு காஷ்மீரில் பயங்கரம்: பாஜக பிரமுகர் சுட்டுக் கொலை Originally posted on The Subeditor Tamil

More Crime News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை